30.5.10

பொதுஅறிவு துணுக்குகள்

கருப்புப் பெட்டி








விமான விபத்துக்கள் ந்டக்கும்போதெல்லாம் விபத்துக்கான காரணங்களையறிய விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணி ந்டக்கிறது என்ற செய்தி தவறாமல் இடம் பெறும். அது என்ன கருப்புப் பெட்டி ..? அதைப்பற்றிய சில விவரங்களைத் தெரிந்து கொள்வோமா...
அது கருப்புப் பெட்டி என்றழைக்கப்பட்டாலும் கருப்பு நிறத்தில் இருக்காது; எளிதில் அடையாளம் காணும் வகையில் ஆரஞ்சு அல்லது சிவப்பு வண்ணத்திலிருக்கும்.எஃகால் செய்யப்பட்ட மிகவும் உறுதியான பெட்டி இது; இதன் மீது பல அடுக்குகளாக எஃகுத் தகடுகள் சுற்றப்பட்டிருக்கும். இது எவ்வளவு கடுமையான விபத்திலும் சேதமடையாது; 2012 டிக்ரி ஃபாரன்ஹீட் வெப்பத்தை தாங்கும் அளவுக்கு உறுதியானது; 1100 டன் அளவுக்கு இரும்பு பாரத்தை இதன் மீது ஏற்றினாலும் இது ந்சுங்காது. கடலின் ஆழத்தில் வீழ்ந்தாலும் எவ்வித பாதிப்பிற்கும் உள்ளாகாது.இதனுள்ளிருக்கும் பேட்டரிகள் 6 ஆண்டுகள் வரை செயல்படும்.
இதனுள் 2 பிரிவுகள் இருக்கும். ஒன்று Flight data recorder எனப்படும்; விமானம் பறக்கும் உயரம், வேகம், நேரம் போன்ற விவரங்கள் இதில் பதிவாகும். மற்றொன்று Voice recorder எனப்படும்; இதில் விமானியின் அறையில் ந்டக்கும் உரையாடல்கள் மற்றும் அங்கு ஏற்படும் சப்தங்கள் இதில் பதிவாகும்.
இந்தப் பெட்டி விமானத்தின் வால் பகுதியில் இருக்கும். இதிலிருந்து பீப்.. பீப் ..என்ற ஒலி எப்போதும் வந்து கொண்டேயிருக்கும் ; விமான விபத்திற்குப் பிறகு இப்பெட்டியை தேடிக் கண்டுபிடிக்க இந்த ஒலி உதவுகிறது.....


வண்ணங்கள்


வண்ணங்கள் இல்லாத வாழ்க்கையை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது. உணவுக்கு எவ்வாறு உப்பு அவசியமோ, அதுபோல வாழ்க்கைக்கு வண்ணங்கள் அவசியம். வண்ணங்கள் நமக்கு சந்தோஷத்தையும், ஆனந்தத்தைம் தருகின்றன. அதனால் அனைவரும் வண்ணங்களை விரும்புகின்றனர்.

ஆடை மட்டுமின்றி உணவு, செல்போன்கள், காலணிகள், பைகள், கண்ணாடிகள், தலைமுடி என எல்லாவற்றிலும் வித்தியாசமான வண்ணங்களை எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர் இன்றைய இளையதலைமுறையினர். கருப்பு-வெள்ளையில் பாரப்பதற்கு போரடித்த புத்தகங்கள் கூட இன்றைக்கு பலவிதமான வண்ணங்களில் வெளிவந்து படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.

வண்ணங்களைச் சாதாரணமாக நினைத்து விடக் கூடாது. நாம் தேர்ந்தெடுக்கும் வண்ணங்களை பொறுத்து நம்முடைய மனநிலை அமைவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, நீங்கள் அடர்த்தியான வண்ணங்களில் உடை அணியும்போது, சந்தோஷமாக உணர்வீர்கள்; ஒருவிதமான தன்னம்பிக்கை தானாகவே உங்கள் உள்ளத்தில் உருவாகி விடும். அதேநேரம் அடர்த்தி குறைந்த வண்ணங்களால் ஆன உடைகளை நீங்கள் அணியும்போது சோம்பல் உணர்வு தோன்றும்.

இந்தியர்களை பொறுத்த வரையில், அவர்களின் மேனி நிறங்களை வைத்து நன்றாக வகைபடுத்தலாம்.

வெள்ளை- இவர்களுக்கு அடர்த்தியான வண்ணங்கள் பொருத்தமாக இருக்கும். சிவப்பு, கடல் ஊதா, கறுப்பு போன்ற வண்ணங்கள் ஏற்றவை.

மாநிறம்- மெஜந்தா, ஆரஞ்சு போன்ற நடுத்தரமான வண்ணங்கள் சிறந்தவை.

கறுப்பு- மெருன், மயில் ஊதா போன்ற வண்ணங்கள் நன்றாக இருக்கும்.

இதைத் தவிர்த்து கறுப்பு-வெள்ளை வண்ணங்கள் அனைவருக்கும் ஏற்றவை. தனக்கு பொருத்தமில்லாத வண்ணங்களின் மேல் ஆசை கொண்டவர்கள், அணிகலன்கள், பர்ஸ், கைபை, ஸ்டோல், செல்போன், கண்ணாடி, காலணி, கைக்குட்டை போன்றவற்றை தான் விரும்பிய வண்ணங்களில் வாங்கி பயன்படுத்தி மகிழ்கிறார்கள்.

மெஜந்தா, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் போன்றவற்றைக் கதகதபான வண்ணங்களாகக் குறிப்பிடுகின்றனர். இந்த வண்ணங்களால் ஆன உடைகளை அணியும்போது வெப்பநிலை சமச்சீராக வைக்கப்பட்டு உடல் கதகதப்பாக இருக்கும்.வெளிர் நீலம், பச்சை, பர்பிள் போன்றவற்றை குளிரான வண்ணங்கள் எனலாம். இந்த வண்ணங்களால் ஆன உடைகளை அணியும்போது மனம் ஒருவிதமான அமைதி நிலையில் காணப்படுகிறது.

அடர்த்தியான வண்ணங்களை மாலை மற்றும் இரவு நேரங்களில் அணிந்து கொள்ளலாம். அப்போதுதான் அவை உயர்ந்த சிறப்பான தோற்றத்தைத் தரும். அதேபோல் அடர்த்தி குறைந்த வண்ணங்களை பகல் நேரங்களில் அணிய வேண்டும். அப்போதுதான் சூரிய வெளிச்சத்திலிருந்து பாதுகாத்து, குளிர்ச்சியாக இருபது போல் உணர வைக்கும்.

அனைத்து வண்ணங்களுடனும் பொருந்திபோகும் தன்மை வெள்ளைக்கு உண்டு. அதுபோல எல்லா விதமான ஆடைகளையும் வெள்ளை வண்ணத்தில் அணியலாம். பொதுவாக வெள்ளை வண்ண உடைகளை அணிந்தாலே ஒரு உயர்ந்த தோற்றத்தைக் கொடுக்கும். அதனால்தான் மிகபெரிய பதவிகளில் இருப்பவர்கள் கூட எந்த நேரமும் வெள்ளை உடைகளிலேயே காட்சி தருகிறார்கள்.

அலைபாயாமல் மனதை அடக்கி ஒருநிலைபடுத்தும் தன்மை கொண்டதால்தான், மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட அனைவரும் வெள்ளை வண்ண உடைகளையே அணிகின்றனர். இது விரைவிலேயே அழுக்கானாலும், பலர் இந்த வண்ணத்தை விரும்பி அணிகின்றனர்.

அணிந்து கொள்பவருக்கு சிறப்பான ஸ்டைலைத் தருவதில் கறுப்பு வண்ணத்துக்கு பெரும்பங்குஉண்டு. பெரும்பாலும் பார்ட்டிகளுக்கு கறுப்பு வண்ண உடைகள் ஏற்றவை. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் பார்ட்டி, விழாக்கள், திருமணம் ஆகிய எல்லாவற்றிலும் கறுப்பு வண்ண உடைகள் முதலிடம் பிடிக்கின்றன. இந்தியாவில் சோக வண்ணமாக இதைக் கருதுவதால் பெரும்பாலும் சுப நிகழ்ச்சிகளுக்கு கறுப்பு வண்ண உடைகளை அணிவதில்லை.

சிவப்பை `பேஷன் கலர்’ என்று குறிப்பிடுகின்றனர். பெரும்பாலான பேஷன் டிசைனர்கள் சிவப்பு வண்ணத்தை பயன்படுத்துகின்றனர். காதலர்களுக்கு மிகவும் பிடித்த வண்ணங்களுள் சிவப்பு முதலிடம் பெறுகிறது. பெண்களுக்கு மிகவும் பிடித்தது பிங்க். இந்த வண்ண உடைகளை அணிம்போது மென்மை, ரொமான்ஸ் போன்ற உணர்வுகள் தோன்றுகின்றன. தற்போது ஆண்களும் விரும்பும் வண்ணமாக இது உள்ளது. கடல், வானம் என ஊதா வண்ணம் எல்லா இடங்களிலும் விரவிக் கிடக்கிறது. இந்தியில் இதை `நிலா’ என்று அழைக்கிறார்கள்.

பரந்துபட்ட இயற்கையில் பச்சை வணமே பெரும்பங்கு வகிக்கிறது. அடர்த்தியானது, அடர்த்தி குறைந்தது என இரண்டு வகைகள் உண்டு. இன்டீரியரை இந்த வண்ணத்தில் அலங்கரித்தால் நன்றாக இருக்கும். அடர்த்தியாகக் காணப்படும் மஞ்சள் வண்ணம் பார்வையை கூசச் செய்யும். பிரவுன் `பூமியின் வண்ணம்’ எனப்படுகிறது. பெரும்பாலும் ஆண்களே இந்த வண்ணத்தை விரும்பி அணிகின்றனர்.

கறுப்பு, க்ரே, வெள்ளை, கடல் முலம் போன்ற வண்ணங்கள் ஆண்களுக்கு மிகவும் பிடித்தவை. வெள்ளை சட்டைக்கு அடர்த்தியான வண்ணங்களாலான கோட் பொருத்தமாக இருக்கும். அடர்த்தியான வண்ணங்கள் அமைந்த சட்டைக்கு பிளாக் கோட் நன்றாக இருக்கும்.

அலுவலகம் செல்லும்போது வெள்ளை, ஊதா போன்ற வண்ணங்களால் ஆன உடைகளே சிறந்தது. அடர்த்தியான வண்ணங்கள் மனதை திசைதிருப்பி விடும். எனவே, அடர்த்தி குறைந்த வண்ணங்களை பயன்படுத்த வேண்டும். அடர்த்தியான வண்ணங்களை விரும்புபவர்கள் குடை, கைக்குட்டை போன்றவற்றை அடர்த்தியான வண்ணங்களில் வாங்கி பயன்படுத்தலாம்.

சிவப்பு, வயலட், பிங்க், நீலம் என அடர்த்தியான வண்ணங்களையே குழந்தைகள் விரும்புகின்றனர். அவர்களின் அறைச்சுவர்களை பல்வேறு வண்ணங்களால் அலங்கரிக்கலாம். இதனால் வண்ணங்களை பற்றிய புரிதல் அவர்களுக்கு ஏற்படும். விலங்குகளின் படங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை விதவிதமான வண்ணங்களில் எழுதி வைக்கும்போது, குழந்தைகள் வண்ணங்களால் ஈர்க்கபட்டு அவற்றை கற்றுக் கொள்கிறார்கள்.

வெள்ளை, கறுப்பு, சிவப்பு, கடல் ஊதா, பிங்க், சில்வர், காப்பர் போன்ற வண்ணங்கள் வசந்த காலத்திற்கு ஏற்றவை. ரோஸ் பிங்க், கடல் ஊதா, ரோஸ் பிரவுன், வெளிர் ஊதா போன்றவை கோடை காலத்திற்கு உகந்ததாக இருக்கும். கறுப்பு, ஆரஞ்சு போன்ற வண்ணங்களை இந்தக் காலத்தில் பயன்படுத்தக் கூடாது. ஆரஞ்சு, கோல்டு, பிரவுன் போன்ற வண்ணங்கள் இலையுதிர் காலத்திற்குச் சிறந்தவை. ஊதா வண்ணத்தை இந்தக் காலத்தில் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. கோல்டன் மஞ்சள், கோல்டன் பிரவுன், வெளிர் ஆரஞ்சு போன்றவை குளிர்காலத்திற்கு ஏற்றதாக இருக்கும். அடர்த்தியான வண்ணங்களை இந்தக் காலத்தில் பயன்படுத்தக் கூடாது....


மேதைகளின் அப்பாக்கள்


உலக அளவில் புகழ்பெற்று அவர்கள் இறந்தும், இறவாப் புகழுடன் வரலாற்றில் இடம்பிடித்துள்ள எத்தனையோ பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள் சாதாரண மனிதர்களாகத்தான் இருந்துள்ளனர்.

இதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உள்ளன.

அதில்...வில்லியம் ஷேக்ஸ்பியர் எனும் உலக இலக்கிய மேதையின் அப்பா குதிரை லாயத்தினை பராமரித்து வருபவராக இருந்துள்ளார்.

தாமஸ் ஆல்வா எடிசனின் தந்தையோ படகு செய்து வாழ்க்கை நடத்திய ஏழையாக இருந்துள்ளார்.

பெஞ்சமின் பிராங்ளின் தந்தை மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரியாக இருந்துள்ளார்.

பெரும் ஆட்சியாளராக இருந்த ஹிட்லரின் தந்தை சாதாரண கட்டிட கூலித் தொழிலாளி.

ஆபிரகாம் லிங்கத்தின் அப்பாவோ சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டனின் அப்பா சாதாரண வியாபாரிதான்.

ஆங்கில அகராசியின் ஆசிரியரான சாமுவேல் ஜான்சனின் தந்தை மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்த புத்தக வியாபா‌ரியாவார்.

மொழிகளைத் தாண்டி உலக மக்களையே சிரிப்பில் ஆழ்த்திய சார்லி சாப்ளின் தந்தை வீட்டு வேலைக்காரராக இருந்துள்ளார்.

எனவே நாம் இருக்கும் இடம் வேண்டுமானால் கீழே இருக்கலாம். ஆனால் இருக்கப் போகும் இடம் மிக உயர்ந்ததாக இருக்க நாம் தான் முயல வேண்டும்.

பெற்றவர்களின் வழிகாட்டுதல் எத்தனை பேருக்குக் கிடைக்கும். மேற்கண்டவர்களுக்கெல்லாம் அவர்களது அப்பாக்களின் வழிகாட்டுதல் இருந்திருக்குமா என்ன? அவர்களாகவே அவர்களுக்கென ஒரு பாதையை தேர்ந்தெடுத்து அதில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளனர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக