12.6.10
உலககோப்பை கால்பந்து..
உலககோப்பையை முன்னிட்டு குறும்பதிவு சேவையான டிவிட்டரும் உலககோப்பைக்கான தனி பகுதியை துவக்கியுள்ளது.டிவிட்டரின் முகப்பு பக்கத்தில் இடது பக்கத்தில் உள்ள உலககோப்பை 2010 என்னும் சின்ன லோகோவை கிளிக் செய்தால் இந்த சிறப்பு பகுதி வந்து நிற்கிறது.
இணையவாசிகள் மத்தியில் பிரபலாமானதாக இருக்கும் டிவிட்டர் எப்போதுமே உலகம் இப்போது என்ன நினைக்கிறது எனபதை உணர்த்தக்கூடியதாக இருக்கிறது. அதாவது டிவிட்டர் பதிவுகள் மூலம் நடைபெறும் உரையாடல் உலகம் இப்போது எவற்றை முக்கியமாக கருதுகிறது என்பதன் கண்ணாடியாக அமைவதாக கருதபப்டுகிறது.
இன்னும் ஒரு மாத காலத்திற்கு உலகின் மொழி கால்பந்தாகவே இருக்கும்.டிவிட்டரிலும் கால்பந்து சார்ந்த பதிவுகளே ஆதிக்கம் செலுத்தப்போகின்றன.
கால்பந்து தொடர்பான பதிவுகளை ஒரே இடத்தில் படிக்கவும் ,கால்பந்து குறித்தும் போட்டிகள் குறித்து டிவீட் செய்யவும் வசதியாக டிவிட்டர் இந்த தனி பகுதியை உருவாக்கியுள்ளது.
இந்த பகுதியில் முன்னணி டிவீட்கள் என்னும் குறிப்போடு தற்போது டிவிட்டரில் வெளியாகும் உலககோப்பை கால்பந்து தொடர்பான டிவிட்டர் செய்திகள் அணிவகுத்து வருகின்றன.அருகிலேயே உலக்கோப்பை நிகழ்ச்சி நிரல் வரிசையில் போட்டிகளீன் விவரங்கள் அவற்றில் பங்கேற்கும் நாடுகளீன் கொடிகளோடு கொடுக்கப்பட்டுள்ளன.கொடிகலீல் கிளிக் செய்தால் அந்த நாடு தொடர்பான டிவிட்டர் செய்திகள் வந்து நிற்கின்றன.இப்படி டிவிட்டரில் உலககோப்பையை மிக எளிதாக பின்தொடரலாம்.
ரசிகர்கள் தங்கள் டிவீட்களையும் பதிவு செய்து உரையாடலில் இணையலாம்.
இதைதவிர முகப்பு பக்கத்தின் மேலே போட்டியில் பங்கேற்கும் 32 நாடுகளின் கொடிகலூம் லோகோவாக இடம்பெற்றுள்ளன.அதில் கிளிக் செய்தால் அந்த நாடு தொடர்பான டிவிட்டர் பதிவுகளை காணலாம்..
டிவிட்டரின் உலககோப்பை பக்கத்திற்கு தாராளமாக சபாஷ் போடலாம்.
உலக்கோப்பை போட்டிகளின் போது கால்பந்து சார்ந்த செய்திகளை ஒருங்கிணைப்பது பெரும் சவாலாக இருக்கும் என்பதை உணர்ந்து டிவிட்டர் இந்த பக்கத்தை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்ற சூப்பர் பவுல் போட்டியின் போது பாதிக்கு மேற்பட்ட டிவிட்டர் செய்திகள் இந்த போட்டி தொடர்பானதாகவே இருந்ததை அடுத்து டிவிட்டர் உலககோப்பையின் போதும் இதே நிலை ஏற்படலாம் என உணர்ந்து டிவிட்டர் உலககோப்பை பகுதியை அருமையாக உருவாக்கியுள்ளது.
http://twitter.com/worldcup/worldcup
10.6.10
இண்டெர்நெட் டிவி
யூடியூப் தெரியும்.டிவி டியூப் தெரியுமா?
டிவியூடியூப்பை டிவி நிகழ்ச்சிகளுக்கான யூடியூப் என்று சொல்லலாம்.
இந்த இணையதளம் வாயிலாக டிவி நிகழ்ழ்ச்சிகளை இலவசமாக பார்க்கலாம். சும்மா இல்லை;உலகம் முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிவி சேனல் நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்.
டிவி நிகழ்சிகளை இணையத்தில் திரட்டித்தரும் சேவையான டிவி டியூப் அகண்ட அலைவரிசை மற்றும் இண்டெர்நெட் டிவி நிகழ்ச்சிகளில் இருந்து சிறந்தவற்றை திரட்டித்தருவதாக சொல்கிறது.
இதற்காக டவுண்லோடு செய்யவோ அல்லது எதாவது சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யவோ தேவையில்லை நிகழ்ச்சிகளை தேர்வு செய்து கிளிக் செய்தாலே போதும்.
டிவி நிகழச்சிகள் பலவேறு தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் விருப்பமானவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
இதைத்தவிர முகப்பு பக்கத்திலேயே பிரபலமான சேனல், சமீபத்திய சேனல் , தற்போது பார்க்கப்படும் சேனல் ஆகிய பகுதிகள் மூலமும் நிகழ்ச்சிகளை தேர்வு செய்யலாம்.
உலகலாவிய அனுபவத்தை விரும்புகிறவர்களுக்க சரியான விருந்து இந்த தளம்.அதோடு கண்ணை கசிக்கி கொண்டு பார்க்கும் நம்மூர் சேனல்களை பார்த்து வெறுத்துப்போனவர்கள் இந்த டிவி டியூப்பை மிகவும் விரும்பலாம்.
http://www.tv-tube.net/
பேசும் படங்கள்
ஒரு நல்ல புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளை பேசும் என்று சொலவது ஒரு புறம் இருக்கட்டும் உண்மையிலேயே புகைப்படங்களை பேசவைக்க முடியும் தெரியுமா? அதாவது புகைப்படங்களில் உள்ளவர்கள் பேசுவது போல் வாசகங்களை இடம் பெற வைக்க முடியும் தெரியுமா?
இப்படி புகைப்படங்களின் மீது வாசகங்களை இடம்பெறச்செய்வது பேச்சுக்குமிழ்கள் என்று குறிப்பிடப்படுகிறது.இத்தகைய குமிழ்களை காமிக் புத்தகங்களில் பார்த்து படித்து ரசித்திருப்பீர்கள்.
எந்த புகைப்படத்தையும் இப்படி வாசகங்களோடு பேசும் சித்திரங்களாக்க முடியும்.
ஆனால் இது தொழில்நுட்ப ஆற்றல் மிக்கவர்களுக்கே சாத்தியம் என்று நினைத்து கொண்டிருந்திர்கள் என்றால் மாற்றிக்கொள்ளுங்கள்.
ஸ்பீச்சபிள் இணையதளம் இதனை மிகவும் சுலபமாக்கியிருக்கிறது.இந்த தளத்தை பயன்படுத்தி எவரும் எந்த புகைப்படத்திலும் பேச்சு குமிழ்களை ஒட்ட வைத்து அவற்றை பேச வைக்க முடியும்.
இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் குறிப்பிட்ட புகைப்படத்தை இந்த தளத்தில் பதிவேற்ற வேண்டியது மட்டுமே. அதன் பிறகு இஷடம் போல வாசகங்களை டைப் செய்து குமிழ்களாக மாற்றிவிடலாம்.
இந்த படங்களை சுலபமாக ஃபேஸ்புக் அல்லது டிவிட்ட மூலம பகிர்ந்து கொள்ளலாம்.விருப்பபட்டால் இந்த தளத்தின் மூலம் அனைவரோடும் பகிரலாம்.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள படங்கள் அல்லது இண்டெர்நெட்டில் பார்த்து ரசிக்கும் படங்களை இதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.
இப்படி ஏற்கனவே சமர்பிக்கப்பட்டுள்ள படங்களையும் பார்த்து ரசிக்கலாம்.அவற்றில் உள்ள வாசகங்களையும் திருத்தி எழுதலாம்.
புகைப்படங்களை ரசிப்பவர்கள் மற்றும் நகைச்சுவை உணர்வு கண்டவர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.
ஒரு நல்ல புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளை பேசும் என்று சொலவது ஒரு புறம் இருக்கட்டும் உண்மையிலேயே புகைப்படங்களை பேசவைக்க முடியும் தெரியுமா? அதாவது புகைப்படங்களில் உள்ளவர்கள் பேசுவது போல் வாசகங்களை இடம் பெற வைக்க முடியும் தெரியுமா?
இப்படி புகைப்படங்களின் மீது வாசகங்களை இடம்பெறச்செய்வது பேச்சுக்குமிழ்கள் என்று குறிப்பிடப்படுகிறது.இத்தகைய குமிழ்களை காமிக் புத்தகங்களில் பார்த்து படித்து ரசித்திருப்பீர்கள்.
எந்த புகைப்படத்தையும் இப்படி வாசகங்களோடு பேசும் சித்திரங்களாக்க முடியும்.
ஆனால் இது தொழில்நுட்ப ஆற்றல் மிக்கவர்களுக்கே சாத்தியம் என்று நினைத்து கொண்டிருந்திர்கள் என்றால் மாற்றிக்கொள்ளுங்கள்.
ஸ்பீச்சபிள் இணையதளம் இதனை மிகவும் சுலபமாக்கியிருக்கிறது.இந்த தளத்தை பயன்படுத்தி எவரும் எந்த புகைப்படத்திலும் பேச்சு குமிழ்களை ஒட்ட வைத்து அவற்றை பேச வைக்க முடியும்.
இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் குறிப்பிட்ட புகைப்படத்தை இந்த தளத்தில் பதிவேற்ற வேண்டியது மட்டுமே. அதன் பிறகு இஷடம் போல வாசகங்களை டைப் செய்து குமிழ்களாக மாற்றிவிடலாம்.
இந்த படங்களை சுலபமாக ஃபேஸ்புக் அல்லது டிவிட்ட மூலம பகிர்ந்து கொள்ளலாம்.விருப்பபட்டால் இந்த தளத்தின் மூலம் அனைவரோடும் பகிரலாம்.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள படங்கள் அல்லது இண்டெர்நெட்டில் பார்த்து ரசிக்கும் படங்களை இதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.
இப்படி ஏற்கனவே சமர்பிக்கப்பட்டுள்ள படங்களையும் பார்த்து ரசிக்கலாம்.அவற்றில் உள்ள வாசகங்களையும் திருத்தி எழுதலாம்.
புகைப்படங்களை ரசிப்பவர்கள் மற்றும் நகைச்சுவை உணர்வு கண்டவர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.www.speechable.com/
ஈரானில்இணடெர்நெட்சூப்பர் மார்க்கெட்.
இண்டெர்நெட் என்றால் குலைநடுங்கும் நாடுகளில் ஈரானும் ஒன்று.கட்டுப்பாடில்லாத இண்டெர்நெட் ஆபத்தானது என கருதும் ஈரானில் இண்டெர்நெட்டை இஷ்டம் போல எல்லாம் பயன்படுத்த முடியாது.
இண்டெர்நெட் சுதந்திரம் என்பது அரசுக்கு எதிராக் பயன்படுத்தப்படும் என்ற பலமான அச்சம் இருப்பதால் அதிகாரிகள் இணையவாசிகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்த வண்ணம் இருப்பார்கள்.
அதோடு எதற்கு வம்பென்று ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற வலைப்பின்னல் தள வசதிகளுக்கும் வாய்ப்பூட்டு போட்டு விட்டனர்.
அதிலும் அதிபர் தேர்தலின் போது அரசின் தணிக்கையை மீறி முறைகேடுகளை டிவிட்டர் மூலம் இணையவாசிகள் உலகுக்கு பரைசாற்றிய பிறகு இன்னும் எச்சரிக்கையாக இருக்கின்றனர்.
இப்படி இண்டெர்நெட் விஷயததில் கட்டுப்பொட்டித்தனமாக நடந்து கொள்ளும் ஈரானில் அதிசயத்திலும் அதிசயமாக இணைய சூப்பர் மார்க்கெட் உருவாக்கப்பட்டுள்ளது.
மேடோனாக் டாட் காம் என்னும் அந்த இணையதளம் 2500 க்கும் மேற்பட்ட பொருட்களை இணடெர்நெட் மூலம் விற்பனை செய்கிறது.முதல் கட்டமாக தலைநகர் தெஹரானில் டோர் டெலிவரி வழங்க உள்ள இந்த தளம் பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்த உள்ளது.
இணைய சூப்பர் மார்க்சூப்பர் மார்க்ககெட் ஈரானுக்கு நல்லவிதமாக அமையட்டும்
http://www.meydoonak.com/
இண்டெர்நெட் சுதந்திரம் என்பது அரசுக்கு எதிராக் பயன்படுத்தப்படும் என்ற பலமான அச்சம் இருப்பதால் அதிகாரிகள் இணையவாசிகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்த வண்ணம் இருப்பார்கள்.
அதோடு எதற்கு வம்பென்று ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற வலைப்பின்னல் தள வசதிகளுக்கும் வாய்ப்பூட்டு போட்டு விட்டனர்.
அதிலும் அதிபர் தேர்தலின் போது அரசின் தணிக்கையை மீறி முறைகேடுகளை டிவிட்டர் மூலம் இணையவாசிகள் உலகுக்கு பரைசாற்றிய பிறகு இன்னும் எச்சரிக்கையாக இருக்கின்றனர்.
இப்படி இண்டெர்நெட் விஷயததில் கட்டுப்பொட்டித்தனமாக நடந்து கொள்ளும் ஈரானில் அதிசயத்திலும் அதிசயமாக இணைய சூப்பர் மார்க்கெட் உருவாக்கப்பட்டுள்ளது.
மேடோனாக் டாட் காம் என்னும் அந்த இணையதளம் 2500 க்கும் மேற்பட்ட பொருட்களை இணடெர்நெட் மூலம் விற்பனை செய்கிறது.முதல் கட்டமாக தலைநகர் தெஹரானில் டோர் டெலிவரி வழங்க உள்ள இந்த தளம் பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்த உள்ளது.
இணைய சூப்பர் மார்க்சூப்பர் மார்க்ககெட் ஈரானுக்கு நல்லவிதமாக அமையட்டும்
http://www.meydoonak.com/
7.6.10
ஆடியோ வடிவில் தகவல்களைமாற்ற....
பாடல்களை மட்டும் தான் கேட்டு ரசிக்க வேண்டுமா? செய்திகளை கேட்டு ரசித்தால் என்ன?அதே போல வலைப்பதிவுகளையும் படிக்காமல் கேட்க முடிந்தால் எப்படி இருக்கும்?
அற்புதமாக தான் இருக்கும் ஆனால் இது எப்படி சாத்தியம் என கேட்பவராக இருந்தால் கவலையே வேண்டாம். இதற்காக என்றே ஒரு இணையதளம் இருக்கிறது.கேரி யுவர் டெக்ஸ்ட் என்பது அந்த தளத்தின் பெயர்.
பெயருக்கு ஏற்ப உங்கள் டெக்ஸ்ட்டை அதாவது வரி வடிவத்தை ஆடியோவாக மாற்றி எடுத்துச்செல்ல வழி செய்கிறது இந்த தளம்.
http://www.carryouttext.com/
படிப்பதை விட கேட்பது நன்று என்னும் எண்ணம் கொண்டவர்களுக்கு உருவாக்கப்பட்ட ஆடியோ புத்தகங்களை பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.இதே போல நீங்கள் விரும்பி படிக்கும் செய்தி தளங்களில் உள்ள செய்திகள்,வலைப்திவாளர்களின் பதிவுகள்,ஆகியவற்றை ஒலி வடிவில் மாற்றிக்கொள்வதை இந்த தளம் சாத்தியாமாக்குகிறது.
அது மட்டுமல்ல அவற்றை எம் பி 3 கோப்பாக டவுண்லோடு செய்து கொள்ளலாம்.இதன் பொருள் நாம் படிக்க விரும்பும் செய்தி மற்றும் தகவல்களை நம்முடன் கொண்டு சென்று விரும்பும் நேரத்தில் ஐபோட் போன்ற சாதனங்களின் மூலம் கேட்டு மகிழலாம்.
இதற்கென தனியே எந்த சாப்ட்வேரையும் டவுண்லோடு செய்ய வேண்டியதில்லை.சும்மா கட் காபி பேஸ்ட் செய்தால் போதும் எம் பி 3 கோபாக மாற்றி விடலாம்.
எதையும் கேட்க நினைப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள சேவை. இப்போதைக்கு இலவசமாக உள்ளது.
தொழில்நுட்பம் உண்மையில் எங்கோ போய் கொண்டிருக்கிறது.
டச் ஸ்கிரீன் தொழில்நுட்பத்தின் உதவியோடு மேஜை அல்லது எந்த ஒரு பலகை போன்ற பரப்பையும் தெடு திரையாக மாற்றி விடுவதற்கான சாத்தியம் உருவாகியுள்ளது.
மைக்ரோசாப்ட் இதனடிப்படையில் சோதனை முயற்சி ஒன்றை செய்ல்படுத்தி வருகிறது. இதன் அடுத்த பாய்ச்சலாக கைகளையே விசைப்பலகையாக மாற்றும் பரிசோதனை முயற்சியில் அமெரிக்க ஆய்வு மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கார்னகி மெலான் பலகலையை சேர்ந்த கிரிஸ் ஹாரிஸன் எனபவரும் மைக்ரோசாபட் நிறுவனத்தைச்சேர்ந்த டெஸ்னே டான் என்னும் ஆய்வாளரும் சேர்ந்து இந்த விசைப்பலகையை வடிவமைத்துள்ளனர்.
போனில் பேச வேண்டுமா? பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுக்க வேண்டிய அவசியமில்லை. அப்படியே கையை உயர்த்தினால் போதும் அதன் மீது செல்போன் விசைப்பலகை வண்ண எழுத்துக்களாக மின்னும். கை விரல்களால் அவற்றின் மீது அழுத்தினால் போதும் போனில் பேசலாம் இதே முறையில் குறுஞ்செய்தி அனுப்பலாம்.
போன் என்றில்லை ,வயர்லெஸ் மூலம் எம் பி 3 சாதனத்தையோ,கம்ப்யூட்டரையோ கூட இயக்கலாம்.. இத செயல்பாட்டு சூட்சமம் மணிக்கட்டில் அணியக்கூடிய ஹை டெக் பட்டையில் உள்ளது.
இந்த பட்டை தான் பைகோ புரஜக்டெர் என்று குறிப்பிடப்படும் விசைப்பலகையை கை விரல்களின் மீது தோன்றச்செய்கிறது. அதன் பிறகு கை விரல்களால் தட்டும் போது உண்டாகும் நுண்ணிய ஒலி அதிர்வுகள் மூலம் எந்த எழுத்து டைப் செய்யபப்டுகிறது எனபதை உணர்ந்து கொள்கிறது.
இந்த அமைப்புக்கு ஸ்கின்புட் என்று பெயர் சூட்டியுள்ளனர்.
செல்போனில் இண்டெர்நெட்டை அணுக முடிந்த பிறகு உலாவிக்கொண்டே இணையத்தை பயன்படுத்துவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த தன்மைகேற்ப சேவைகளை வழங்கும் நோக்கமும் உருவாகியுள்ளது. இப்படி தொழில்நுட்பம் திறந்து விட்டிருக்கும் புதிய வழிகளை முழு வீச்சில் பயன்படுத்திக்கொள்ள புதிய சேவைகள் தேவைப்படுகின்றன.பழைய கட்டுப்பாடுகளை மீறி செயல் பட வேன்டியிருக்கிறது.
இப்படி சிந்தனை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் கட்டுப்பபாடுகளில் ஒன்று தான் விசைப்பலகை.இணைய தொழில்நுட்பத்தில் பெரும் பாய்ச்சல் நிகழ்ந்து கொன்டிருக்கும் வேளையில் மாமூலான விசைப்பலகை ஒரு இடயூறு தானே.சாதனங்களன் அளவு சுருங்குவதற்கு ஏற்ப விசைப்பலகை சுருங்க வேண்டாமா?
ஆனால் விசைப்பலைகை சுருங்கும் போது அவற்றை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறதே. ஆனால் ஏன் நமக்கு அறிமுகமான வகையிலேயே விசைப்பலகையை அணுக வேண்டும்.
ஏன் புதிய விசைப்பலகைகளை உண்டாக்க கூடாது.விசைப்பலகை என்று தனியே இல்லாமல் நமது தோளையே விசைப்பலகையாக மாறறினால் என்ன? இப்படி யோசித்ததன் விளைவு தான் ஸ்கின்புட் விசைப்பலகை.
தர்போது சோதனை முறையில் முன்வைக்கப்பட்டிருந்தாலும் எதிர் காலத்தில் இந்த வகை விசைப்பலகை பல மாயங்களை நிகழ்த்தலாம்.
நாம் இணையத்தில் உலாவுவதை கம்ப்யூட்டர் பயன்படுத்தும் விதத்தை இவை மாற்றியமைக்க்லாம்.அதைவிட முக்கியமாக உடல் இயக்க குறைபாடு கொண்டவர்களுக்கு இவை பேருதவியாக இருக்கலாம்.
http://www.chrisharrison.net/projects/skinput/
இந்தியா வருகிறது கூகுள் போன்
கூகுல் அறிமுகம் செய்த நெக்சஸ் ஒன் செல்போன் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என ஆர்வத்தோடு காத்திருப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி கூகுல் போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.
கூடுதல் நல்ல செய்தி இந்தியாவுக்கு என்று பிரத்யேக மாற்றங்களோடு இந்த போன் அறிமுகமாக உள்ளது.
ஆப்பிளின் ஐபோனுக்கு போட்டியாக கூகுல் நெக்சஸ் ஒன் போனை அறிமுகம் செய்தது. ஆரமப் பரபரப்பிற்கு பிறகு இந்த போன் பற்றி அதிக செய்திகள் இல்லை.
இந்நிலையில் கூகுல் போன் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. சி என் பி சி டிவியை சேர்ந்த் அன்கிட் எனபவர் இது பற்றி தனது டிவிட்டர் பதிவில் செய்தி வெளியிட்டுள்ளார்.
கூகுல் அதிகாரியோடு பேசிக்கொண்டிருந்த போது கூகுலின் இந்திய போன் திட்டம் பற்றி அறிய முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட போன் போல் அல்லாமல் இந்தியாவுக்கு என்று பிரத்யேக மாற்றங்களோடு இந்த போனை அறிமுகம் செய்ய கூகுல் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன் பொருள் போனில் வசதிகள் குறைவாக இருக்கலாம். அதே நேரத்தில் விலையும்குறைவாக இருக்காலம். அமெரிக்க விலையிலேயே இந்தியாவிலும் ஐபோனஒ அறிமுகம் செய்து ஆப்பிள் செய்த தவற்றை மகூகுல் செய்ய விரும்பவில்லை போலும்.
எப்படியோ கூகுல் போனே வருக.
6.6.10
தபாலில் சுவாரஸ்யம் தரும் இணையதளம்.
இமெயில் வந்த பிறகு தபாலை பலரும் கண்டுகொள்வதில்லை.தபாலுக்கான தேவையும் உள்ளபடியே குறைந்துவிட்டது.
ஆனால் இந்த இண்டெர்நெட் யுகத்திலும் தபால் அனுப்பி வைக்கும் ஆர்வத்தை தூண்டும் இணையதள்ம் ஒன்று அறிமுகமாகியுள்ளது தெரியுமா?
மேப்ஸென்வலப் என்பது அந்த தளத்தின் பெயர்.மிக எளிமையான ஆனால் சுவையான சேவை .
இந்த தளத்தில் நுழைந்தால் தாபால் உரையை அச்சிட்டு அதனை கொண்டு உங்கள் நண்பர்களுக்கு அதனை அனுப்பி வைக்கலாம்.
இதில் என்ன சிறப்பமசம் என்றால் அந்த உரையில் உங்கள் இருப்பிடம் கூகுல் வரைபடத்தில் குறிப்படப்பட்டிருக்கும்.அதிலேயே உங்கள் செய்தியையும் இடம்பெற வைக்கலாம். தபால் உரையும் கூகுல் வரைபடத்தோடு அச்சிடப்பட்டு இருப்பதால் அதில் உங்கள் இருப்பிட நகரம் குறிப்ப்டப்பட்டிருப்பது சின்ன சுவாரஸ்யம் தானே.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ,உங்கள் நகரம் பற்றிய தகவலை தெரிவித்து ,நீங்கள் அனுப்ப விரும்பும் செய்தியை டைப் செய்ய வேண்டியது தான்.
வாழ்த்து செய்தி போன்றவற்றுக்கு ஏற்றதாக இருக்கும். இல்லை ஒரு மாற்றத்திற்காக நண்பர்களுக்கு தாபால் அனுப்பி தான் வியக்க வையுங்களேன்
இமெயில் வந்த பிறகு தபாலை பலரும் கண்டுகொள்வதில்லை.தபாலுக்கான தேவையும் உள்ளபடியே குறைந்துவிட்டது.
ஆனால் இந்த இண்டெர்நெட் யுகத்திலும் தபால் அனுப்பி வைக்கும் ஆர்வத்தை தூண்டும் இணையதள்ம் ஒன்று அறிமுகமாகியுள்ளது தெரியுமா?
மேப்ஸென்வலப் என்பது அந்த தளத்தின் பெயர்.மிக எளிமையான ஆனால் சுவையான சேவை .
இந்த தளத்தில் நுழைந்தால் தாபால் உரையை அச்சிட்டு அதனை கொண்டு உங்கள் நண்பர்களுக்கு அதனை அனுப்பி வைக்கலாம்.
இதில் என்ன சிறப்பமசம் என்றால் அந்த உரையில் உங்கள் இருப்பிடம் கூகுல் வரைபடத்தில் குறிப்படப்பட்டிருக்கும்.அதிலேயே உங்கள் செய்தியையும் இடம்பெற வைக்கலாம். தபால் உரையும் கூகுல் வரைபடத்தோடு அச்சிடப்பட்டு இருப்பதால் அதில் உங்கள் இருப்பிட நகரம் குறிப்ப்டப்பட்டிருப்பது சின்ன சுவாரஸ்யம் தானே.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ,உங்கள் நகரம் பற்றிய தகவலை தெரிவித்து ,நீங்கள் அனுப்ப விரும்பும் செய்தியை டைப் செய்ய வேண்டியது தான்.
வாழ்த்து செய்தி போன்றவற்றுக்கு ஏற்றதாக இருக்கும். இல்லை ஒரு மாற்றத்திற்காக நண்பர்களுக்கு தாபால் அனுஇமெயில் வந்த பிறகு தபாலை பலரும் கண்டுகொள்வதில்லை.தபாலுக்கான தேவையும் உள்ளபடியே குறைந்துவிட்டது.
ஆனால் இந்த இண்டெர்நெட் யுகத்திலும் தபால் அனுப்பி வைக்கும் ஆர்வத்தை தூண்டும் இணையதள்ம் ஒன்று அறிமுகமாகியுள்ளது தெரியுமா?
மேப்ஸென்வலப் என்பது அந்த தளத்தின் பெயர்.மிக எளிமையான ஆனால் சுவையான சேவை .
இந்த தளத்தில் நுழைந்தால் தாபால் உரையை அச்சிட்டு அதனை கொண்டு உங்கள் நண்பர்களுக்கு அதனை அனுப்பி வைக்கலாம்.
இதில் என்ன சிறப்பமசம் என்றால் அந்த உரையில் உங்கள் இருப்பிடம் கூகுல் வரைபடத்தில் குறிப்படப்பட்டிருக்கும்.அதிலேயே உங்கள் செய்தியையும் இடம்பெற வைக்கலாம். தபால் உரையும் கூகுல் வரைபடத்தோடு அச்சிடப்பட்டு இருப்பதால் அதில் உங்கள் இருப்பிட நகரம் குறிப்ப்டப்பட்டிருப்பது சின்ன சுவாரஸ்யம் தானே.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ,உங்கள் நகரம் பற்றிய தகவலை தெரிவித்து ,நீங்கள் அனுப்ப விரும்பும் செய்தியை டைப் செய்ய வேண்டியது தான்.
வாழ்த்து செய்தி போன்றவற்றுக்கு ஏற்றதாக இருக்கும். இல்லை ஒரு மாற்றத்திற்காக நண்பர்களுக்கு தாபால் அனுப்பி தான் வியக்க வையுங்களேன்
இமெயில் வந்த பிறகு தபாலை பலரும் கண்டுகொள்வதில்லை.தபாலுக்கான தேவையும் உள்ளபடியே குறைந்துவிட்டது.
ஆனால் இந்த இண்டெர்நெட் யுகத்திலும் தபால் அனுப்பி வைக்கும் ஆர்வத்தை தூண்டும் இணையதள்ம் ஒன்று அறிமுகமாகியுள்ளது தெரியுமா?
மேப்ஸென்வலப் என்பது அந்த தளத்தின் பெயர்.மிக எளிமையான ஆனால் சுவையான சேவை .
இந்த தளத்தில் நுழைந்தால் தாபால் உரையை அச்சிட்டு அதனை கொண்டு உங்கள் நண்பர்களுக்கு அதனை அனுப்பி வைக்கலாம்.
இதில் என்ன சிறப்பமசம் என்றால் அந்த உரையில் உங்கள் இருப்பிடம் கூகுல் வரைபடத்தில் குறிப்படப்பட்டிருக்கும்.அதிலேயே உங்கள் செய்தியையும் இடம்பெற வைக்கலாம். தபால் உரையும் கூகுல் வரைபடத்தோடு அச்சிடப்பட்டு இருப்பதால் அதில் உங்கள் இருப்பிட நகரம் குறிப்ப்டப்பட்டிருப்பது சின்ன சுவாரஸ்யம் தானே.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ,உங்கள் நகரம் பற்றிய தகவலை தெரிவித்து ,நீங்கள் அனுப்ப விரும்பும் செய்தியை டைப் செய்ய வேண்டியது தான்.
வாழ்த்து செய்தி போன்றவற்றுக்கு ஏற்றதாக இருக்கும். இல்லை ஒரு மாற்றத்திற்காக நண்பர்களுக்கு தாபால் அனுப்பி தான் வியக்க வையுங்களேன்
www.mapenvelope.com/
புதிய மொழி கற்றுக்கொள்ளலாம்..
எந்தவித முயற்சியும் இல்லாமலேயே ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்?
இதை தான் சாத்தியமாக்குவதாக சொல்கிறது பாப்லிங் இணையதளம். யாதொரு பிரயத்தனமும் செய்யாமலேயே புதிய மொழியையோ (அ) புதிய செயலையோ கற்றுக்கொள்ளலாம் என்று ஆசை காட்டுகிறது இந்த தளம். “படிக்காமலேயே கற்பது’ என்று இதை வர்ணிக்கவும் செய்கிறது. படிக்காமலேயே கற்பதா அதெப்படி சாத்தியம்? இது மந்திரத்தால் மாங்காய் விழுவது போல் அல்லவா இருக்கிறது.
உண்மையில் முயற்சி செய்யாமல் எதுவும் சாத்தியம் இல்லை. படிக்காமல் கல்வியும் கை கூடாது. பாப்லிங் இணைய தளத்திலும் நீங்கள் முயற்சி செய்தாக வேண்டும். ஆனால் முயற்சிப்பது என்பது அயர்ச்சி தரக்கூடியதாக இல்லாமல் இயல்பானதாக அமைவதே பாப்லிங் தளத்தில் உள்ள சூட்சுமம். அதாவது உங்களை அறியாமலேயே நீங்கள் கற்க விரும்பும் விஷயத்தை பரிட்சயம் செய்து கொள்ள வழி செய்கிறதுது.
இதில் வியக்கவோ, குழம்பவோ அதைவிட முக்கியமாக சந்தேகிக்கவோ எதுவுமில்øலை. எல்லோருக்குள்ளும் இயல்பாக இருக்கும் சோம்பேறித்தனத்தை மனதில் வைத்துக் கொண்டு அதனை வெற்றி கொள்ளும் வகையில் இந்ததளம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் என்னவோ எல்லோருக்கும் இருக்கவே செய்கிறது. அலுவல் நிமித்தமாக (அ) ஆர்வத்தின் காரணமாக புதியமொழியை கற்றுக்கொள்ள யாரும் முற்படலாம். இணையதளத்தில் இதற்கான வழிகளும் உண்டு.
ஆனால் பிரச்சனை என்னவென்றால் ஆரம்பத்தில் இருக்கக்கூடிய வேகமும், உற்சாகமும் தொடர்ந்து இருக்கும் என்று சொல்ல முடியாது. முதல் சில நாட்களுக்கு பிறகு அலுப்பே தோன்றலாம். ஏதோ சுமை போன்ற உணர்வு ஏற்படலாம். இந்த கட்டத்தை தாண்டுவதற்கு கொஞ்சம் சுய ஊக்கம் தேவை. அல்லது குதிரைக்கு முன் கேரட் காட்டப்படுவது போல ஒரு நிர்பந்தம் உந்தித்தள்ள வேண்டும். எத்தனை பேருக்கு இவை சாத்தியம் என்று தெரியவில்லை. பெரும்பாலானோருக்கு புதியது கற்கும் ஆர்வம், பழகிய சோம்பலால் பாழாகிப்போகும்.
இந்த சோம்பலை வெல்லும் வழியை தான் பாப்லிங் உள்ளடக்கி இருக்கிறது. இந்த தளத்தில் நீங்கள் மிக சுலபமாக புதிய மொழியை கற்றுக் கொள்ளலாம். புதிய செயல் (அ) ஆற்றலை பயின்று கொள்ளலாம். ஆனால் படிக்க மட்டும் வேண்டியதில்லை. அதனை பாப்லிங் பார்த்துக் கொள்ளும்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த தளத்தில் உறுப்பினராகிவிட்டு அதன் பிறகு கற்பதற்கான மொழி (அ) செயலை தேர்வு செய்ய வேண்டியதுதான். தேர்வு செய்த பின் அதனை மறந்து விட்டு நீங்கள் பாட்டுக்கு “கம்ப்யூட்டர்’ முன் அமர்ந்து வேலையை பாருங்கள். நடுநடுவே கம்ப்யூட்டர் திரையில் சின்னப்பெட்டி தோன்றிக் கொண்டே இருக்கும். அந்த பெட்டியில் ஒரு கேள்விபதில் இருக்கும். அது புதிய மொழியின் வார்த்தையாகவோ, புதிய செயலின் சிறு அங்கமாகவோ இருக்கும். வேலை நேரம் முழுவதும் இப்படி சின்னச்சின்ன பெட்டி தோன்றி மறைந்து கொண்டிருக்கும். வேலை பார்த்துக் கொண்டே அந்த பெட்டியையும் கவனித்துக் கொள்ளலாம். ஒரு சில நாட்களில் கொஞ்சம் வார்த்தைகளையும் கற்றுக் கொண்டு விடலாம். யாரும் தார்குச்சி போடாமலேயே நாமும் தனியே பிரயத்தனம் செய்யாமல் மிக இயல்பாக கற்றுக் கொள்வதற்கான எளிமையான வழி இது.
பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலியன் உட்பட பல மொழிகளுக்கும் வேறு பல செயல்களுக்கும் இப்படி பாப்லிங்கள் இருக்கின்றன. ஆக மொத்தம் 150 தலைப்புகள் இருப்பதாக இந்த தளம் தெரிவிக்கிறது. உங்களுக்கு எது தேவையோ தேர்வு செய்து கொள்ளலாம். நீங்கள் விருப்பப்பட்டால் உங்களுக்கான பாப்லிங் பெட்டிகளை நீங்களே உருவாக்கி கொள்ளவும் முடியும். கம்ப்யூட்டரில் செயல்படக்கூடிய செயலியாக அல்லது பயர்பாக்ஸ் பிரவுசரின் விரிவாக்கமாக இதனை டவுண்லோடு செய்து கொள்ளலாம். கொஞ்சம் சுவாரசியமான தளம் தான் இல்லையா?
இந்த தளத்தை உரிமையாளர் “பாப்லிங்’ உருவான விதத்தை விபரிப்பதும் சுவாரஸ்யமாகவே உள்ளது. சோம்பேறி ராஜாக்கள் பலர் எதுவும் செய்யாமலேயே ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளும் புத்திசாலித்தனத்தை பெற்றிருப்பதாகவும் இதுவே பாப்லிங் பிறப்பிப்பதற்கான மூல விதை என்றும் சொல்கிறார். அத்தகைய சோம்பேறிகளின் ஒருவரான தானும், ஸ்பானிஷ் மொழியை கற்க விரும்பிய போது ஆயிரக்கணக்கான ஸ்பானிஷ் சொற்களை சுலபமாக தெரிந்து கொண்டு விட்டால் எப்படி இருக்கும் என கற்பனையில் ஆழ்ந்து விட்டாராம். கற்பனைக்கான வழியை தேடிக் கொண்டிருந்த போது தன் நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருக்கிறோமோ, அதில் அவ்வப்போது பிளாஷ் கார்டு தோன்றிக் கொண்டே இருந்தால் அதிக முயற்சியே இல்லாமல் ஸ்பானிஷ் மொழி சொற்களை கற்றுக்கொண்டு விடலாம் என்று தோன்றியிருக்கிறது.
இந்த எண்ணம் உதித்த பிறகு காதலியோடு மெக்சிகோ சென்று வந்தவர் அங்கு ஸ்பானிஷ் சொற்களை கேட்ட உற்சாகத்தில் புதிய மொழி உட்பட எந்த ஒரு விஷயத்தையும் பாப்அப் பெட்டிகளில் கற்பதற்கான பாப்லிங் இணைய தளத்தை உருவாக்கி விட்டார். நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.
ஆனால் புதிய மொழியை கரைத்து குடித்து விடலாம் என்று எல்லாம் கனவு காணாதீர்கள். அந்த மொழி பேசும் ஊருக்கு சென்றால் நலம் விசாரித்து வழி கேட்கும் அளவுக்கு தேர்ச்சி பெறலாம்.
http://www.popling.net/
கூகுலுக்கு போட்டியாக...
கூகுல் சீனாவில் இருந்து வெளியேறுமா இல்லையா என்பது தெரியவில்லை;ஆனால் சீனாவில் கூகுலைப்போலவே தேடியந்திரம் ஒன்று உதயமாகியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. (நன்றி;http://news.bbc.co.uk/2/hi/technology/8483597.stm
அச்சு அசல் கூகுலைப்போலவே வடிவமைப்பு கொண்ட அந்த தேடியந்திரத்தின் பெயரும் கிட்டத்தட்ட கூகுல் போலவே இருக்கிறது.கூஜே; இது தான அந்த தேடியந்திரத்தின் பெயர்.
கூகுல் எழுத்துக்களைப்போலவே இதன் லோகோவும் அமைந்துள்ளது.ஆனால் ஜெ ஜே என்னும் வார்த்தை சீன மொழிக்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளதாம்.
கூஜே என்றால் சீன் மொழியில் அக்கா என்று பொருளாம்.
இந்த தேடியந்திரத்தின் நோக்கம் பின்னணி பற்றிய விவரங்களை தெரியவில்லை.ஆனால் கூகுக்லைப்போல முரண்டு பிடிக்காமல் சீன அரசுக்கு ஏற்ப இது தேடல் முடிவுகளை தணிக்கைக்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிகிறது.
இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் ‘ தம்பி வெளியேறும் முடிவை கைவிட்டதால் அக்காவுக்கு மகிழ்ச்சி ‘ என குறிப்படப்பட்டுள்ளதாம். இதன் பொருள என்ன என்று தெரியவில்லை.
——–http://www.goojje.com/
5.6.10
இமெயிலுக்குஒரு முகமூடி...
இணையம் இப்போது பூட்டுகள் நிறைந்த இடமாக மாறிக்கொண்டிருக்கிறது.அந்த பூட்டுகளை திறக்க இமெயில் சாவியை பய்னபடுத்த வேண்டியிருக்கிறது. பிரபலமான சேவைகள் அல்லது இணையதளங்களை பயன்படுத்தும் அனுமதியை பெற இமெயில் முகவரியை சமர்பிக்க வேன்டியிருக்கிறது.இவ்வளவு ஏன் வலைப்பதிவை படித்துவிட்டு பின்னூட்டம் அளிக்க வேண்டியிருந்தாலும் இமெயில் முகவரி தேவைப்படுகிறது. நம்பகமான தளங்கள் என்றால் இமெயில் சமர்பிப்பதில் எந்த பிரச்ச்னையும் இல்லை. ஆனால் ஒரு சில தளங்களில் இமெயில் முகவரியை தர தயக்கம் ஏற்படலாம்.இது போன்ற நேரங்களில் குறிப்பிட்ட தளம் அல்லது சேவையை பயன்படுத்த முடியாமல் போகலாம். இமெயில் முகவரியை சமர்பிப்பதில் இன்னோரு பிரச்சனையும் இருக்கிறது.இமெயில் முகவரியை தருவது என்பது திறந்தவெளியில் பனத்தை வைப்பது போல தான்.அது களவாடப்படும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது.இப்படி சமர்பிக்கப்படும் இமெயில்களை கொத்திச்செல்வதற்காக என்றே பாட்கள் என்று சொல்லப்படும் குட்டி ரோபோக்கள் இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கின்றன. அதன் பிறகு உங்களுக்கு அழையா மெயில்களை அனுப்பி வைக்கும்.உங்கள் முகவரி பெட்டியில் அடிக்கடு வந்து சேரும் எரிச்சலூட்டும் வியாபார ,விளம்பர மெயில்கள் வந்து சேருவது இப்படி தான். இந்த பிரச்சனைக்கு அழகான ஒரு தீர்வு இருக்கிறது.http://scr.iம்/ இணையதளம் அந்த தீர்வை வழங்குகிறது.இமெயில் கோரும் எந்த சேவையும் பயன்படுத்தும் முன் இந்த தளத்திற்கு சென்று உங்கள் இமெயிலை சமர்பிக்க வேண்டும்.உடனே அந்த முகவரியை யாரும் படிக்க முடியாத குறிச்சொற்களாக மாற்றிவிடும். இனி இமெயிலுக்கு பதிலாக இந்த குறிச்சொற்களை சமர்பிக்கலாம்.இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் இமெயில் பாதுகாப்பானதாக இருக்கும்.குறிச்சொற்கள் மூடிய இந்த இமெயிலை ரோபோக்கள் படிக்க முடியாது.அவற்றோடு கேட்கப்படும் ரகசிய கேள்விக்கு பதில் அளிக்கும் நபர்கள் மட்டுமே இதனை படிக்க முடியும். சூவர்ஸ்யமான சேவை;முயற்சித்து பார்க்கலாம்
http://scr.im/
20 ஆண்டுகள் கழித்து நீங்கள் எப்படி தோற்றம் தருவீர்கள்...
திரைப்பட நடச்த்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வயதான காலத்தில் எப்படி இருப்பார்கள் என்று சித்தரிக்கும் புகைப்படங்கள் இண்டெர்நெட்டிலும் இமெயிலிலும் உலா வருவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.
இந்த படங்களை பார்க்க கொஞ்சம் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்.
சரி இதே போல உங்கள் தோற்றத்தையும் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? இப்படி உங்களின் வயதான புகைப்படத்தை பார்க்கும் ஆசை இருந்தால் அதற்கான இணையதளம் ஒன்று இருக்கிறது.
இன்டுவன்டி இயர்ஸ் என்னும் அந்த தளத்தில் 20 ஆண்டுகள் கழித்து நீங்கள் எப்படி தோற்றம் தருவீர்கள் என்று பார்த்து மகிழலாம்.இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் அழகான் புகைப்படத்தை இந்த தளத்தில் பதிவேற்றுவது மட்டும் தான்.
முக உணர்வு தொழில்நுடபமான பேசியல் ரிககனைஷேசன் என்று சொல்லப்படும் உத்தியை பயன்படுத்தி இந்த தளம் செயல்படுகிறது.
20.ஆண்டா 30 ஆண்டா என்பதை தேர்வு செய்து கொள்ளலாம். குடிப்பழக்கம் அல்லது போதை பழக்கம் உண்டா என்று சொல்ல கேட்கிறது இந்த தளம்.அதற்கு முன் ஆணா பெண்ணா என்று சொல்லிவிட வேண்டும்.
முயன்று பாருங்கள்.
http://www.in20years.com/
இந்த படங்களை பார்க்க கொஞ்சம் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்.
சரி இதே போல உங்கள் தோற்றத்தையும் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? இப்படி உங்களின் வயதான புகைப்படத்தை பார்க்கும் ஆசை இருந்தால் அதற்கான இணையதளம் ஒன்று இருக்கிறது.
இன்டுவன்டி இயர்ஸ் என்னும் அந்த தளத்தில் 20 ஆண்டுகள் கழித்து நீங்கள் எப்படி தோற்றம் தருவீர்கள் என்று பார்த்து மகிழலாம்.இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் அழகான் புகைப்படத்தை இந்த தளத்தில் பதிவேற்றுவது மட்டும் தான்.
முக உணர்வு தொழில்நுடபமான பேசியல் ரிககனைஷேசன் என்று சொல்லப்படும் உத்தியை பயன்படுத்தி இந்த தளம் செயல்படுகிறது.
20.ஆண்டா 30 ஆண்டா என்பதை தேர்வு செய்து கொள்ளலாம். குடிப்பழக்கம் அல்லது போதை பழக்கம் உண்டா என்று சொல்ல கேட்கிறது இந்த தளம்.அதற்கு முன் ஆணா பெண்ணா என்று சொல்லிவிட வேண்டும்.
முயன்று பாருங்கள்.
http://www.in20years.com/
கிளிக் செய்யாமலே தேடுவதற்க்கு ஒரு தேடுயந்திரம்.
எத்தனை காலம் தான் கூகுலையே பயன்படுத்திக்கொண்டிருப்பது ஒரு மாற்றம் தேவை என நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக புதியதொரு தேடியந்திரம் அறிமுகம் ஆகியுள்ளது.கூகுலை விட்டு விட்டு இனி தாரளமாக அந்த தேடியந்திரத்தை பயன்படுத்தி பார்க்கலாம்.
அட போங்கய்யா கூகுலைவிட சிறந்த தேடியந்திரமா? எத்தனை முறை இதே வர்ணனையை கேட்டு ஏமாந்திருக்கிறோம் என அலுத்து கொள்பவர்கள் கவனிக்க உண்மையிலேயே சூப்பர் தேடியந்திரம் இது என்பதை உறுதியாக சொல்லலாம்.
டக்டக்கோ என்னும் விநோதமான பெயர் கொண்ட அந்த புதிய தேடியந்திரம் உண்மையிலேயே கூகுலுக்கு மாற்றாக விளங்க கூடிய ஆற்றலை பெற்றிருக்கிறது.
இணைய உலகில் சற்றேரக்குறைய இரண்டாயிரத்துக்கும் அதிகமான தேடியந்திரங்கள் உள்ளன.இவற்றில் பல அறிமுகமாகும் போது கூகுலுக்கு மாற்று என வர்ணித்துக்கொள்வது வழக்கம் தான்.ஒரு சில தேடியந்திரங்களை அடுத்த கூகுல் என்று பத்திரிகைகள் வர்ணிப்பதும் வழக்கம்.ஆனால் இதுவரை எந்த தேடியந்திரத்தாலும் கூகுலை ஒரங்கட்ட முடியவில்லை.
முன்னால் கூகுலர்களால் ஆரம்பிக்கப்பட்ட குயில்(cuil) தேடியந்திரம் கூட இப்படி தான் கூகுலுக்கான சவால் என்று அழைக்கப்பட்டு ஏக பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு என்ன ஆனது என்றே தெரியாமல் போய் இப்போது விக்கிபீடியா பாணியில் களஞ்சிய தேடியந்திரமாக தன்னை உருமாற்றி கொண்டுள்ளது.
தேடியந்திர வரலாற்றை அறிந்தவர்கள் புதிய தேடியந்திரங்கள் வரும் போகும் ஆனால் கூகுல் எல்லோராலும் நாடப்படும் தேடியந்திரமாக தொடரும் என்பதை அறிந்தேயிருப்பார்கள். அதிலும் சாமன்ய இணையவாசிகளை பொருத்தவரை தேடல் என்றால் கூகுல் தான்.
கூகுல் அதன் வேலையை ஒழுங்காக செய்கிறது என்பதும் அதனை மிஞ்சக்கூடிய தொழில்நுட்பம் இன்னும் சாத்தியமாகவில்லை என்னும் நிலையில் இன்னுமொரு தேடியந்திரமாக உதயமாகியுள்ள டக்டக்கோ மாறுபட்ட தேடியந்திரம் என்னும் உணர்வை முதல் பார்வையிலேயே தந்து வியக்க வைக்கிறது.
கூகுலைப்போலவே இன்னொரு தேடியந்திரம் என்று தன்னை மற்றி அடக்கமாகவே கூறிக்கொள்ளும் டக்டக்கோ கூகுலுக்கு பதிலாக ஏன் தன்னை முயன்று பார்ப்பதற்கு என்று நெத்தியடியாக சில காரணங்களை பட்டியலிடுகிறது.
கூகுலை விட சிக்கல் இல்லாத தேடல் பக்கம்,விளம்பர இடையூறு இல்லாத தேடல் முடிவுகள் ,சிறப்பான குறுக்கு வழிகள் என நீளும் அந்த பட்டியலில் உண்மையிலேயே நெத்தியடியான அமசம் பூஜ்ய கிளிக் வசதியாகும். ஜீரோ கிளிக் என குறிப்பிடப்படும் இந்த வசதியை கிளிக் செய்யாமலேயே தேடுவது என புரிந்து கொள்ளலாம்.
அதெப்படி கிளிக் செய்யாமலேயே தேடுவது சாத்தியம்?வழக்கமாக தேடும் போது என்ன செய்வோம்.கீவேர்டை டைப் செய்துவிட்டு தேடு என கட்டளையிடுவது போல என்டர் தட்டுவோம் அல்லவா?அதன் பிறகு தேடல் முடிவுகள் வந்து நிற்கும் அல்லவா?அதில் ஏதாவது ஒன்றை கிளீக் செய்தால் தான் தேவிஅயான் தகவல்களை பெற முடியும். ஆனால் டக்டக்கோ தேடியந்திரமோ கிளிக் செய்ததுமே தேடப்படும் பதம் தொடர்பான அறிமுக குறிப்புகளாக சில தகவல்கலை அளிக்கிறது.
இந்த குறிப்புகள் மிகச்சரியாக தேடப்படும் பொருள் குறித்த சரியான அறிமுகமாக அமைந்து விடுகிறது.உதாரனத்திற்கு பிரெஞ்சு ஒபன் என் தேடினால் பாரிசில் மே மாதம் துவங்கி நடைபெறும் டென்னிஸ் போட்டி என்ற அறிமுகம் கிடைக்கிறது.பல நேரஙக்ளில் தேடப்படும் பொருளை புரிந்து கொள்ள இந்த அறிமுகம் உதவலாம். சில நேரங்களில் இந்த அறிமுகமே கூட போதுமாக இருக்கலாம்.புதிய பொருள் குறித்து மிக அவசரமாக தேடும் போது அறிமுக குறிப்புகள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
விக்கிபீடியா போன்ற தளங்களில் இருந்து எடுக்கப்பட்டாலும் கூட இந்த அறிமுகம் பயனுள்ளதாகவே இருக்கிறது.விரிவான தேடல் தேவை என்றால் பக்கவாட்டில் உள்ள வசதியை துணைக்கு அழைத்து யூடியூப் உடபட பல இடங்களில் தேட முடியும்.
இந்த தேடியந்திரத்தில் கூகுல் என டைப் செய்து பார்த்தால் கூகுல் என்றால் பல அந்ததம் உண்டு உங்களுக்கு எது வேண்டும் என்று கேட்கப்படு அதன் கீழேயே கூகுல் என்றால் தேடியந்திரம் என்ற அறிமுகமும் இடம் பெறுகிறது.பலவித அர்த்தங்களில் ஒன்றாக கூகுல் என முடியும் பெயர் கொண்டவர்களும் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
இந்த அமசத்திற்காக நிச்சயம் இதனை பயன்படுத்தி பார்க்கலாம்.இதனை தவிர தேடல் பக்கம் கூகுலைவிட தெளிவானதாக சிக்கலில்லாமல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதே போல தேடல் வரலாற்றை சேமித்து வைப்பதில்லை என்றும் குறிப்டப்பட்டூள்ளது.
இந்த அமசங்கள் எல்லாவற்றையும் கூகுலோடு ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேல் இத முகப்பு பக்கம் வண்ணமயமாக வாத்து மற்றும் இதர ஐகான்களோடு அழகாகவே இருக்கிறது.அதோடு கூகுலில் இருக்கும் அதிர்ஷ்ட தேடல் வசதியை போல (ஐஅய்ம் பீலிங் லக்கி) ஐயம் பீலிங் டக்கி என்னும் கூடுதல் வசதியும் உண்டு.
http://duckduckgo.com/?q=&t=i
இன்டெர்நெட் மோகம்..
என்ன கொடுமை ஐயா இது?
தென்கொரியாவில் இண்டெர்நெட் மோகத்தால் நடந்துள்ள சம்பவத்தை கேள்விப்டும்போது இப்படி தான் சொல்லத்தோன்றுகிறது.
அது மட்டுமல்ல இணைய மோகம் எத்தனை மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று திகைக்க வைக்கிறது.
அந்நாட்டு தம்பதி ஒன்று இண்டெர்நெட்டே கதியென இருந்ததன் விளைவாக தங்களது பச்சிளம் குழந்தையை சரியாக கவனிக்காமால் அதனை பட்டினி கிடந்து பரிதாபமாக பலியாக்கி உள்ளனர்.
இதில் வேதனை என்னவென்றால் குழந்தையின் தாயும் ,தந்தையும் இன்டெர்நெட்டில் ஆன்லை குழந்தையை பாராட்டி சீராட்டி வளர்க்கும் இணைய விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது தான்.
பிரியுஸ் ஆன்லைன் என்னும் அந்த விளையாட்டில் ஈடுபடுபவர்கள் அனிமா என்று அழைக்கபடும் ஆன்லைன் குழந்தைகளை நிஜ குழந்தைகளை போலவே வளர்க்கலாம்.பாச மழை பொழியலாம்.
இந்த தம்பதிகளும் இப்படி ஒரு ஆன்லை குழந்தையை தீவிரமாக வளர்த்து வந்தனர்.வேலையிலாமல் இருந்ததால் பிரச்சனிகலில் இருந்து தப்பிக்க எப்போதும் அவர்கள் இண்டெர்நெட்டே கதியென இருதுள்ளனர். இப்படி நாள் முழுவதும் இண்டெர்நெட் மையத்திலேயே கழித்துள்ளனர்.
இதன் நடுவே தங்கள் குழந்தையையும் கவனித்துள்ளனர். 12 மனி நேரத்திற்கு ஒரு முறை குழந்தைக்கு பாலுட்டியுள்ளனர்.இப்படி பட்டினி கிடந்த அந்த குழந்தை பசி தாளாமல் பலியாகிவிட்டது.
இந்த சம்பவம் நடந்து சில மாதங்கள் ஆன நிலையில் போலீசார் விசாரனை நடத்தி தம்பதியை கைது செய்துள்ளனர்.
இண்டெர்நெட் மோகம் எப்படி சீரழிக்கும் என்பதற்கு வேதனையான உதாரணம்.
4.6.10
உலகின் முதல் செயற்கை பாக்டீரியா உயிரணு கண்டுபிடிப்பு
சனி 22 மே 2010 உலகின் முதல் செயற்கை பாக்டீரியா உயிரணு கண்டுபடிப்பு
உயிரியல் உலகின் உச்சக்கட்ட சாதனையாக செயற்கை உயிரி (செல்) ஒன்றை உருவாக்கி அமெரிக்க அறிவியலாளர்கள் சாதனை படைத்துள்ளன..
த சயின்ஸ்' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கண்டுபிடிப்பு அறிவியல் முன்னேற்றத்தில் ஒரு மாபெரும் முன்னேற்றம் எனக் கருதப்படுகிறது.'இந்த பாக்டீரியாவின் மரபணுப் பாரம்பரியம் என்பது ஒரு கணினி தான். ஆகவே செயற்கையாகப் படைக்கப்பட்ட முதல் உயிர் வடிவம் என்றால் அது நிச்சயம் இதுதான்.' என்கிறார் இந்த செயற்கை உயிரியைப் படைத்திருக்கின்ற ஆராய்ச்சிக்தலைவர் டாக்டர் கிரெய்க் வெண்டர்.
கிரெய்க் வெண்டர்.
அதாவது ஒரு பாக்டீரியாவுக்கான மரபணுக் கட்டமைப்பை கணினி மென்பொருள் துணையுடன் வடிவமைத்து செயற்கையாக இரசாயனங்களைக் கலந்து உருவாக்கி அதனை ஒரு உயிரணுக்குள் செலுத்தி விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்
ஒரு செல்லின் மொத்த மரபணுவையும் வேறு ஒரு புதிய செல்லுக்கு மாற்றி அதன் வளர்ச்சியை கண்காணித்தனர். இதில் முக்கிய பங்காற்றியவர் மேரிலாண்டை சேர்ந்த கிரெய்க் என்ற விஞ்ஞானி. அவர் தன் குழுவுடன் நடத்திய ஆய்வு வெற்றி பெற்றிருக்கிறது.
செயற்கையாக உருவாக்கப்பட்ட டி.என்.ஏ. புதிய மரபணுவுடன் தாய் செல் போலவே வளர்ச்சி அடைய துவங்கியது. வேறு விதமாக சொன்னால் ஆட்டின் உயிரணு மாட்டின் உயிரணுவாக மாறியது. அப்படியானால் மரபணுவிலுள்ள குரோமசோம்களையே மாற்றி வேறுவிதமாக செய்யும் சாதனை இது. 'செயற்கையாக உருவாக்கப்பட்ட புதிய செல் மருத்துவ உலகில் பல புதிய பரிணாமங்களை தோற்றுவிக்கும்' என இந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதை அவர்கள் 'சிந்தடிக் செல்' என்று அழைக்கின்றனர்.
பாரம்பரிய நோய்கள் உட்பட பலவற்றுக்கும் இந்த புதிய கண்டுபிடிப்பு உதவும். உதாரணத்திற்கு அழுக்கு தண்ணீரை மிகவும் சுத்தமான தண்ணீராக்குவது
குறுகிய காலத்தில் தடுப்பூசி மருந்துகளை தயாரிப்பது போன்றவைகளுக்கு உதவும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே சமயம் 'உயிரி ஆயுதமாக இது பயன்படுத்தப்படலாம்' என்ற அச்சமும் பேசப்படுகிறது. ஆகவே மரபுப்படி பாதுகாக்கும் நடைமுறைகள் குறித்த கமிஷன் தலைவர் அமி குட்மானுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடிதம் எழுதியுள்ளார். இந்த வெற்றியை பாராட்டிய அவர் ' மருத்துவ சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகிய துறைகளில் இது எந்த அளவு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பச்சை நிறப் புளொரொளிர்வைக் காட்டும் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உயிரியற் புடகம்.
உயிரியல் உலகின் உச்சக்கட்ட சாதனையாக செயற்கை உயிரி (செல்) ஒன்றை உருவாக்கி அமெரிக்க அறிவியலாளர்கள் சாதனை படைத்துள்ளன..
த சயின்ஸ்' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கண்டுபிடிப்பு அறிவியல் முன்னேற்றத்தில் ஒரு மாபெரும் முன்னேற்றம் எனக் கருதப்படுகிறது.'இந்த பாக்டீரியாவின் மரபணுப் பாரம்பரியம் என்பது ஒரு கணினி தான். ஆகவே செயற்கையாகப் படைக்கப்பட்ட முதல் உயிர் வடிவம் என்றால் அது நிச்சயம் இதுதான்.' என்கிறார் இந்த செயற்கை உயிரியைப் படைத்திருக்கின்ற ஆராய்ச்சிக்தலைவர் டாக்டர் கிரெய்க் வெண்டர்.
கிரெய்க் வெண்டர்.
அதாவது ஒரு பாக்டீரியாவுக்கான மரபணுக் கட்டமைப்பை கணினி மென்பொருள் துணையுடன் வடிவமைத்து செயற்கையாக இரசாயனங்களைக் கலந்து உருவாக்கி அதனை ஒரு உயிரணுக்குள் செலுத்தி விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்
ஒரு செல்லின் மொத்த மரபணுவையும் வேறு ஒரு புதிய செல்லுக்கு மாற்றி அதன் வளர்ச்சியை கண்காணித்தனர். இதில் முக்கிய பங்காற்றியவர் மேரிலாண்டை சேர்ந்த கிரெய்க் என்ற விஞ்ஞானி. அவர் தன் குழுவுடன் நடத்திய ஆய்வு வெற்றி பெற்றிருக்கிறது.
செயற்கையாக உருவாக்கப்பட்ட டி.என்.ஏ. புதிய மரபணுவுடன் தாய் செல் போலவே வளர்ச்சி அடைய துவங்கியது. வேறு விதமாக சொன்னால் ஆட்டின் உயிரணு மாட்டின் உயிரணுவாக மாறியது. அப்படியானால் மரபணுவிலுள்ள குரோமசோம்களையே மாற்றி வேறுவிதமாக செய்யும் சாதனை இது. 'செயற்கையாக உருவாக்கப்பட்ட புதிய செல் மருத்துவ உலகில் பல புதிய பரிணாமங்களை தோற்றுவிக்கும்' என இந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதை அவர்கள் 'சிந்தடிக் செல்' என்று அழைக்கின்றனர்.
பாரம்பரிய நோய்கள் உட்பட பலவற்றுக்கும் இந்த புதிய கண்டுபிடிப்பு உதவும். உதாரணத்திற்கு அழுக்கு தண்ணீரை மிகவும் சுத்தமான தண்ணீராக்குவது
குறுகிய காலத்தில் தடுப்பூசி மருந்துகளை தயாரிப்பது போன்றவைகளுக்கு உதவும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே சமயம் 'உயிரி ஆயுதமாக இது பயன்படுத்தப்படலாம்' என்ற அச்சமும் பேசப்படுகிறது. ஆகவே மரபுப்படி பாதுகாக்கும் நடைமுறைகள் குறித்த கமிஷன் தலைவர் அமி குட்மானுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடிதம் எழுதியுள்ளார். இந்த வெற்றியை பாராட்டிய அவர் ' மருத்துவ சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகிய துறைகளில் இது எந்த அளவு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பச்சை நிறப் புளொரொளிர்வைக் காட்டும் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உயிரியற் புடகம்.
உலக புகையிலை எதிர்ப்பு நாள் மே 31
உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம்ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன்இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது
விண்வெளியில்காப்பிகுடிப்பது எப்படி...?
திரவம் குவளையை சாய்க்கையில் உட்சுவரை பிடித்துகொண்டு வாயை நோக்கி தானாகவே ஓடி வருவதெல்லாம் பூமியில்தான். அதன் புவியீர்ப்பு சக்தியினால். அண்டவெளியில், புறவிளியில், புவியீர்ப்பு மைக்ரோ லெவலில் இருக்கையில், காப்பி பங்கி அடித்தது போல (அனுபவித்தவர்கள் கூறியது) அப்படியே குவளையுடன் மிதந்து கொண்டிருக்கும்.
குடிப்பதற்கு ஓரு வழி குவளையில்லாமல் ஒரு பையில் போட்டு மூடி உறிஞ்சலாம். குவளை வேண்டும் என்றால் இப்படி செய்யலாம்.
திரவத்தின் மேற்பரப்பு இழுவிசை (surface tension) உதவி கொண்டு இப்படி பருகுகிறார்கள். குவளையில் இருக்கும் திரவம் மாலிக்யூள்களாலானது. தெரியும். குவளை திரவத்தினுள்ளே ஒரு புள்ளியில் உள்ள மாலிக்யூளை சுற்றிலும் இருக்கும் மாலிக்யூள்கள் சமமாக எல்லா பக்கத்திலும் இழுக்கும். இதற்கு ஓரிண ஒட்டுதல் என்று கொள்ளலாம் (cohesion, cohesive forces).
ஆனால் மேற்பரப்பிற்கு அருகில் உள்ள திரவ மாலிக்யூள்கள் பரப்பிலுள்ள மாலிக்யூள்களை கீழ் நோக்கி தங்களுடன் இழுக்க, பரப்பிற்கு மேல் (திரவம்) ஒன்றுமில்லாமல் போக தோன்றும் பரப்பு இழுவிசை அதனால் கீழ்நோக்கி இயங்கியபடி இருக்கும். அருகில் உள்ள விளக்கப்படத்தை பாருங்கள்.
அடுத்த படத்தில் குவளையின் உட்சுவற்றுக்கருகில் பார்த்தால் திரவம் – சுவர் – திரவத்திற்குமேல் என்று மூன்று விஷயங்களின் விசைகள் எவ்வாறு சமனில் இருக்கிறது என்று புரியும். இதில் f என்று குறிக்கப்பட்டிருக்கும் விசைகள் அனைத்தும் பரப்பு இழுவிசையை சார்ந்தது, f_{l} ஒன்றை தவிர. இது குவளையுடன் திரவம் ஒட்டிக்கொள்ள உதவும் வேற்றிண ஒட்டுதல் விசை (adhesive force).
படத்திலுள்ள இடதுவல விசைகளின் சமன்பாட்டை எழுதினால்
f_{l} = f_{r} sin \theta
மேல்-கீழ் விசைகளின் சமன்பாடு
f_{b} - f_{t} = - f_{r} cos \theta
இதில் நமக்கு அண்டவெளியில் f_{t} கிடையாது. புவியீர்ப்பு இல்லாவிடினும், மாலிக்யூள்களின் விசைகளால் f_{b} இருக்கும். மேலும், பரப்பு இழுவிசை, ஒட்டுதல் பண்பு முதலியவையும் புவியீர்ப்பை சார்ந்திராமல் செயல்படுவதால், f_{l} , f_{r} உம் இருக்கும்.
மேலே உள்ள இரண்டாவது சமன்பாட்டில் f_{b} விசையை குறைத்து f_{r} cos \theta விசையை அதிகப்படுத்தினால் திரவத்தை குவளையின் சுவரையொட்டி மேலே இழுக்க முடியும். இதை செய்வதற்கு (வெளி இயற்பியல்) விஞ்ஞானிகள் வீடியோவில் காட்டிய ஒரு ப்ளாஸ்டிக் குவளையை வடிவமைத்திருக்கிறார்கள்.
கையில் குடிப்பது போல பிடித்துக்கொண்டு மேலிருந்து பார்க்கையில் இது வட்டமாக இருக்காது. இருந்தால், பரப்பு இழுவிசை அனைத்து பக்கங்களிலும் ஒரே மாதிரி மதிப்புடன் இயங்கும். அருகில் இருக்கும் படத்தில் வலப்பக்கத்தில் உள்ளது போல ஒரு சைடில் தட்டி குறுக்கினால் அங்கு அதன் கோணத்திற்கேற்ப (\alpha ) மேலே உள்ள சமன்பாட்டின் விசைகளை வேண்டியவிதம் மாற்றிப்போடலாம். கோணம் \alpha < 180 - 2\theta வாக இருக்கையில் திரவம் இந்த பகுதியில் தானாக மேலே ஏறும். (\theta என்பது போன படத்தில் இழுவிசை திரவம்-குவளைசுவர் இடையே ஏற்படுத்தும் தொடுகோணம்). ஆனால் ஒவ்வொறு திரவத்திற்கும் அதன் பரப்பு இழுவிசை மாறுவதால், அதன் தொடுகோணமும் மாறும். இதனால் குவளையின் இந்த குறுக்கமும் ((\alpha ) மாறுபடும். அதாவது வெளியில் வடிவமைத்த காப்பி குவளை காப்பிக்குதான். பீர் முழுவதுமாக மேலே வருமா தெரியாது. [உபரி விஷயம்: இப்படித்தான் மேலே செல்லும் ராக்கெட்டின் எரிபொருள் சக்ஷன் டாங்கையும் புவியீர்ப்பு குறைந்த நிலையிலும் தானாக திரவ எரிபொருளை உறிஞ்சக்கூடியதாக வடிவமைத்திருப்பர்கள்.]
மொபைல் பயன்படுத்தினால் ஆபத்து வருமா?
புதுடில்லி : தொடர்ந்து மொபைல் போன் பயன்படுத்தினால், புற்றுநோய்
உள்ளிட்ட கொடிய நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக, கடந்த பல
ஆண்டுகளாக நடந்துவரும் ஆய்வுகள் தெரிவித்தன. ஆனால், அதற்கு ஆதரவாக சரியான
கருத்துகளை விஞ்ஞானிகளால் இன்னமும் முடிவு செய்ய இயலவில்லை.
கடந்த 2009ம் ஆண்டு முடிவில் உலகம் முழுவதும், 46 லட்சம் மொபைல்
போன்கள் பயன்பாட்டில் இருந்ததாக சர்வதேச தகவல் தொடர்பு ஆணையம்
கூறியுள்ளது. இந்த எண்ணிக்தை தற்போது பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அதே
போன்று இதை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுவாக மொபைலை அதிகளவில் பயன்படுத்தும் பெண்களுக்கு மாதவிலக்கு
தொடர்பான கோளாறுகளும், ஆண்களுக்கு உயிர் அணு உற்பத்தி குறைபாடுகளும்
ஏற்படும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். மேலும்,
புற்றுநோய் போன்ற கொடிய நோய்களும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறி
வருகின்றனர். இது தொடர்பான ஆய்வுகள் கடந்த 10 ஆண்டுகளாக அதிகளவில் சர்வதேச
அளவில் நடந்து வருகின்றன. இந்த ஆய்வுகள் அனைத்திலுமே எதிர்மறையான
முடிவுகளே கிடைத்திருக்கின்றன. பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மொபைல்
போன் பயன்படுத்துபவர்களுக்கு இரண்டுவிதமான புற்று நோய் வர வாய்ப்புள்ளதாக
சர்வதேச புற்றுநோய் ஆய்வுக்கழகம் தெரிவித்துள்ளது. இதில், மூளைப்பகுதியில்
ஏற்படும், "மெனிஞ்சியோமா' புற்றுநோய்க் கட்டிக்கு வாய்ப்பு என்று
கூறப்பட்டது. அதிலும் மோசமான புற்று நோய்க்கட்டி ஏற்படும் என்று
எச்சரித்ததும் உண்டு.
பார்சிலோனாவைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானி எலிசபெத் கார்டிஸ்
கூறுகையில், "மொபைல் பயன்படுத்துவதால், வாழ்க்கைக்கு வளம் சேர்க்கலாம்.
ஆனால், உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. குறைந்த
அளவில் பயன்படுத்தினாலும், பாதிப்பு ஏற்படாது என்று உறுதியாக கூற
முடியாது' என்று தெரிவித்துள்ளார். மொபைல் பாதிப்பு தொடர்பாக, கடந்த மாதம்
13 நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது.
தற்போது வரும் மொபைல் போன்களில் எப்.எம்., ரேடியோ மற்றும் "டிவி'யும்
உள்ளது. இதற்கு ஆன்டெனாவாக பயன்படுபவை அதில் உள்ள, "இயர் போன்' தான்.
ரேடியோ மற்றும் "டிவி'யில் இருந்து வரும் வானொலி அலைகள் மிகக்குறைந்த
திறன் கொண்டதாயினும், அவை மனித உடலுக்கு தீங்கு இழைக்கக் கூடியதாகும்.
இத்தகைய ஆன்டெனாக்கள் மனித உடலிலிருந்து குறைந்தபட்சம் 40 செ.மீ.,
தூரத்திலாவது இருக்க வேண்டும். ஆனால், மொபைல் போன் எப்.எம்., கேட்கும்
ஒருவர் "இயர் போனை' காதில் வைத்தவாறு கேட்கிறார். நாளடைவில், அது அவருக்கு
மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார ஆய்வு நிறுவனம்
தெரிவித்துள்ளது. இவை மட்டுமல்லாது, மொபைல் போன்களை விமானம் மற்றும்
மருத்துவமனைகளிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. காரணம்,
அதிலிருந்து வரும் மின் காந்த அலைகள் விமானத்தில் உள்ள நுண்ணிய
இயந்திரங்களையும் பழுதாக்கிவிடும் தன்மை கொண்டதாகும். மருத்துவமனைகளிலும்,
அங்குள்ள மருத்துவ சாதனங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தக்கூடியதாகும். ஆனால்
இவைகளுக்கு ஆதாரமாக பத்தாண்டுகள் அல்லது அதேமாதிரி தொடர்ந்து சோதனைகள்
செய்து உறுதிப்படுத்த முடியவில்லை என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக்
கொள்கின்றனர்.
1.6.10
மருதாணி அழகில் ஒரு ஆபத்து.
இளம் பெண்கள் தங்கள் அழகை மேலும் மெருகூட்டிக் கொள்ள மருதாணி, டாட்டூஸ் வரைந்து கொள்வதை நவீன நாகரிகமாக கொண்டிருக்கிறார்கள். இப்படி மருதாணி வரைந்து கொள்வது லுக்கேமியா என்னும் ஒருவித புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல்கலைக்கழகம் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. அந்த நாட்டில் ஆண்களைவிட பெண்கள் இரு மடங்கில் ஏ.எம்.எல். (லுக்கேமியா) என்னும் ஒருவித ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் வசிக்கும் பெண்களைவிட இங்குள்ள பெண்கள் 63 சதவீதமும், இருபாலரும் 78 சதவீதம் அதிகமாக இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு என்ன காரணம் என்று ஆராயப்பட்டதில் கைகளில் அழகிற்காக வரைந்து கொள்ளும் மருதாணி ஒரு வகையில் காரணமாக இருப்பது கண்டறியப்பட்டது. மருதாணியில் உள்ள ரசாயனங்கள் இந்த நோய் தாக்க வாய்ப்பாக அமைகிறது. மேலும் அவர்களின் உடலில் சூரிய ஒளி படுவது குறைவாக இருப்பதும் காரணம் என்று தெரிகிறது.
ஆய்வாளர் இனாம் ஹசன் கூறுகையில், `ஆண்களும், பெண்களும் ஒரே சூழலில் வசிக்கிறோம். ஒரேவித உணவையே உண்கிறோம். ஆனால் பெண்களுக்கு மட்டும் அதிக அளவில் ஏ.எம்.எல். பாதிப்பு ஏன் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. இங்குள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் அவர்கள் மருதாணி வரைந்திருப்பது மட்டுமே’ என்றார்.
கிரடிட்கார்ட் செய்ய வேண்டியவை, வேண்டாதவை.
1. கிரடிட் கார்ட் வாங்கியதும் உங்கள் கையெழுத்தை கார்ட்டின் பின் பக்கம் குறிப்பிட்ட இடத்தில் போடுங்கள். போதுவாக வங்கி கிரடிட் கார்ட் கொடுக்கும் போதே கையெழுத்து போட வேண்டும் என்று சொல்லுவார்கள். அவர்கள் சொல்ல மறந்தாலும், கிரடிட் கார்ட் வாங்கிய கையோடு கையெழுத்து போட்டுவிடுவது நல்லது.
ஒரு வேளை, கையெழுத்து போடாமல் கிரடிட் கார்ட் தொலைத்திருந்தால், அந்த கிரடிட் கார்ட் யாராவது பொருள் வாங்கியிருந்தால் அதற்கு பணம் கட்ட வேண்டிய பொருப்பு உங்களுடையது தான்.
2. பின் (PIN) நம்பரை எங்கும் எழுதி வைக்க வேண்டாம். கிரடிட் கார்ட் பின் நம்பரை கிரடிட் கார்ட் பின் பக்கம் எழுதி வைப்பதோ அல்லது மோபைல் போனில் வைத்திருப்பதோ நல்லதல்ல. நன்கு பரிச்சயமான அல்லது நினைவில் வைத்துக் கொள்ளுவது போல் எண்களை பின் நம்பராக வைத்துக் கொள்ளுங்கள்.
3. கிரடிட் கார்ட்டின் ஜெராக்ஸ் காப்பியை யார் கேட்டாலும் கொடுக்காதீர்கள். கிரடிட் கார்ட்டின் பின் பக்கம் 'CVV' (card verification value) எண் இருப்பதால் அதை வைத்துக் கொண்டு இணையதளத்தில் உங்கள் பெயரில் என்ன பொருள் வேண்டுமானாலும் வாங்க முடியும்.
4. இணையதளத்தில் பொருள் வாங்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். சில ஷாப்பிங் இணையதளங்கள் மிகவும் பாதுகாப்பானது என்று சொல்லுவார்கள். இப்படி பாதுகாப்பானவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் எல்லா தளங்களும் பாதுகாப்பானதாக இருக்காது.
இந்த இணையதளம் பாதுகாப்பானது என்று சான்றிதழ் வாங்கியிருந்தால் மட்டும் அந்த தளத்தில் பொருள் வாங்க உங்கள் கிரடிட் கார்ட் விபரத்தை கொடுக்க வேண்டும்.
உதாரணத்திற்கு, 'VeriSign' - ஒரு தளத்தை பாதுகாப்பானது என்று சொல்லிவிட்டால் தாராளமாக பொருள் வாங்கலாம் என்று பயன்படுத்துபவர்களின் நம்பிக்கை. அப்போது அவர்கள் அந்த தளத்திற்கு பாதுகாப்பு சான்று கொடுத்திருக்கிறார்களா என்று பார்த்து, உங்கள் விபர்த்தை கொடுக்கவும்.
5. நீங்கள் சந்தேகப்படும் எந்த இணையத்தளத்திலும் உங்கள் கிரடிட் கார்ட் பற்றிய விபரத்தை கொடுக்க வேண்டாம். நல்ல பழக்கப்பட்ட, நம்பிக்கையான இணையத்தில் மட்டும் உங்கள் கிரடிட் கார்ட் விபரத்தை கேட்டால் கொடுங்கள்.
6. யாராவது போன்னில் தொடர்பு கொண்டு உங்கள் கிரடிட் கார்ட் விபரத்தை, குறிப்பாக பின் பக்கம் இருக்கும் மூன்று எண்கள் பற்றி கேட்டால் எந்த விபரத்தை சொல்லாதீர்கள்.
வங்கியில் பணிபுரிபவர்கள் உங்களிடம் தொலைப்பேசி அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு கிரடிட் கார்ட் விபரத்தை கேட்க மாட்டார்கள். அப்படி யார் கேட்டாலும், எந்த தகவல் கொடுக்காமல் தொடர்பை துண்டிப்பது நல்லது.
7. கடைக்காரணிடம் கிரடிட் கார்ட் கொடுத்து மிஷினில் தெய்ப்பதை நீங்கள் ஒரு கண் பார்த்து கொள்வது நல்லது. உங்கள் கிரடிட் கார்ட்டை ஒரு முறை தெய்க்கிறானா அல்லது உங்கள் தகவல் பார்ப்பது போல் கிரடிட் கார்ட் மெஷின் வைத்திருக்கிறார்களா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
நிங்கள் கையெழுத்து போட்டு கடைக்காரன் கொடுத்த பேப்பரில் நீங்கள் வாங்கிய பொருளின் விலையை அதில் உள்ளதா என்று சரி பார்த்துக் கொண்ட பிறகு கையெழுத்து போட வேண்டும். நீங்கள் கையெழுத்து போட்ட பேப்பரை கடைக்காரனிடமும், அதன் நகல் உங்களிடமும் கொடுக்கப்படும். உங்களிடம் கொடுக்கப்படும் நகலை தூக்கி எறியாமல் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். மாத இறுதியில் உங்களுக்கு அனுப்பப்படும் கணக்கு விபரத்தோடு (Statement) நீங்கள் வாங்கிய பொருள்களின் விலையையுடன் ஒத்துப் போகின்றனவா பாருங்கள். மாத கணக்கு விபரத்தில் அதிகமாக பணம் குறிப்பிட்டு இருந்தால், வங்கியை தொடர்ப்பு கொண்டு புகார் கொடுக்கலாம்.
நீங்கள் விருப்பப்பட்டால் நீங்கள் வைத்திருக்கும் கிரடிட் கார்ட்டுக்கு இன்ஷூரன்ஸ் கூட எடுத்துக் கொள்ளலாம். ஒரு வேளை நீங்கள் கிரடிட் கார்ட் தொலைத்திருந்தால், தொலைத்த நேரத்தில் இருந்து 12 மணி நேரத்துக்குள் (உதாரணத்திற்கு) கிரட்டி கார்ட்டை பயன்படுத்தி யார் எந்த பொருள் வாங்கியிருந்தாலும் இன்ஷூரன்ஸ் க்ளைம் பண்ணலாம். ஆனால், கிரடிட் கார்ட் தொலைந்து விட்டால் சும்மா இருந்து விட கூடாது. வங்கியின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டு உங்கள் கிரடிட் கார்ட் 16 இலக்கு எண்களை சொல்லி யாரும் பயன்படுத்த முடியாதப்படி தடுக்க வேண்டும்.
இவை எல்லாம் கிரடிட் கார்ட் பயன்படுத்துபவர்கள் அடிப்படையாய் தெரிந்துக் கொள்ள வேண்டிய விபரங்கள். கார்ட்டை பயன்படுத்த பயன்படுத்த உங்களுக்கு பல அனுபவங்கள் அதிகமாக சொல்லிக் கொடுக்கலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)