5.6.10

இன்டெர்நெட் மோகம்..




என்ன கொடுமை ஐயா இது?
தென்கொரியாவில் இண்டெர்நெட் மோகத்தால் நடந்துள்ள சம்பவத்தை கேள்விப்டும்போது இப்படி தான் சொல்லத்தோன்றுகிறது.
அது மட்டுமல்ல இணைய‌ மோகம் எத்தனை மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று திகைக்க வைக்கிற‌து.
அந்நாட்டு தம்பதி ஒன்று இண்டெர்நெட்டே கதியென இருந்ததன் விளைவாக தங்களது பச்சிளம் குழந்தையை சரியாக கவனிக்காமால் அதனை பட்டினி கிடந்து பரிதாபமாக பலியாக்கி உள்ளனர்.

இதில் வேதனை என்னவென்றால் குழந்தையின் தாயும் ,தந்தையும் இன்டெர்நெட்டில் ஆன்லை குழந்தையை பாராட்டி சீராட்டி வளர்க்கும் இணைய விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது தான்.

பிரியுஸ் ஆன்லைன் என்னும் அந்த விளையாட்டில் ஈடுபடுபவர்கள் அனிமா என்று அழைக்கபடும் ஆன்லைன் குழந்தைகளை நிஜ குழந்தைகளை போலவே வளர்க்கலாம்.பாச மழை பொழியலாம்.
இந்த தம்ப‌திகளும் இப்படி ஒரு ஆன்லை குழந்தையை தீவிரமாக வளர்த்து வந்தனர்.வேலையிலாமல் இருந்ததால் பிரச்சனிகலில் இருந்து த‌ப்பிக்க எப்போதும் அவர்கள் இண்டெர்நெட்டே கதியென இருதுள்ளனர். இப்படி நாள் முழுவதும் இண்டெர்நெட் மையத்திலேயே கழித்துள்ளனர்.

இதன் நடுவே தங்கள் குழந்தையையும் கவனித்துள்ளனர். 12 மனி நேரத்திற்கு ஒரு முறை குழந்தைக்கு பாலுட்டியுள்ளனர்.இப்படி பட்டினி கிடந்த அந்த குழந்தை பசி தாளாமல் பலியாகிவிட்டது.

இந்த சம்பவம் ந‌டந்து சில மாதங்கள் ஆன நிலையில் போலீசார் விசாரனை நடத்தி தம்பதியை கைது செய்துள்ளனர்.

இண்டெர்நெட் மோகம் எப்படி சீரழிக்கும் என்பத‌ற்கு வேதனையான உதாரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக