31.5.10

மருத்துவம்..

இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?


ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே "ஹீமோகுளோபின்' என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.

* ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள்தொகைக்கு ஏறக்குறைய இணையானஅளவுக்கு இருக்கும்.

* ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?

எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை (Bone Marrow) இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்டலட்டுகள் உற்பத்தியாகின்றன.

* ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை வராது.

* ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?

ரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.

* ரத்தத்தில் உள்ள "பிளேட்லட்' அணுக்களின் வேலை என்ன?

உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி "பிளேட்லட்' அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி "கார்க்' போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேயா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.

* பிளாஸ்மா என்றால் என்ன?

ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.

* ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?

ரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் "பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது.

* ரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன?

உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் "பம்ப்' செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.

* உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?

ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! - மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம்.

* மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?

மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

* உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?

எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

* ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?

நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் - டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.

* 24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீன் அளவு எவ்வளவு தெயுமா?

24மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.

* தலசீமியா என்பது தொற்று நோயா?

இது தொற்று நோய் அல்ல. தந்தைக்கோ அல்லது தாய்க்கோ தலசீமியா நோய் இருந்தால் குழந்தைக்குப் பிறவியிலேயே இந் நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த பிறகு இந் நோய் வர வாய்ப்பில்லை.

* மூளையின் செல்களுக்கு ரத்தம் செல்லாவிட்டால் விளைவு என்ன?

மூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது ரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

* ரத்தம் உறைவதற்கு எது அவசியம்?

ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 - 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.

* ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?

ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. "‘O' பிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு "யுனிவர்சல் டோனர்' என்று பெயர்.

* ரத்தம் எவ்வாறு குரூப் வாயாக பிக்கப்படுகிறது?

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், A குரூப் ஆகும்; B’ ஆன்டிஜன் இருந்தால், B’ குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (K) குரூப் ஆகும்.

* ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?

செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல்லது குழந்தைப் பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச் ரத்தத்தைச் செலுத்தக் கூடாது.

* ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

கர்ப்பம் தப்பதற்கு முன்பே கணவன் - மனைவி இருவரும் ரத்தப் பிவை சோதனை செய்வது அவசியம். கணவன் - மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தத்தவுடனேயே மகப்பேறு மருத்துவடம் சொல்லிவிட வேண்டும்.

* கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப் பிவு இருந்தால் ஏன் உஷார் தேவை?

கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் (Antibodies) உற்பத்தியாக வழி வகுத்துவிடும்.

* ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிக்கப்படுகிறது?

ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்; இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.

* தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவு என்ன?

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின்போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்து விடும் அபாயம் உண்டு.

* தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவைத் தடுப்பது எப்படி?

நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில், கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை (Antibodies) அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசி போட வேண்டும். இந்த ஊசிக்கு ‘Anti D‘’ என்று பெயர்.

* ரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்?

வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச் சோதனைகள் அவசியம்.

* யார் ரத்த தானம் செய்யக்கூடாது?

உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் (Organ transplant - recipient) ஆகியோர் ரத்த தானம் செய்யக்கூடாது.

* மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா?

இல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.

* தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?

புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்தியை நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது என்றாலும், தானம் கொடுத்த பிறகு ஒரு மணி நேரத்துக்காவது புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு, 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.

* ரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?

நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்த தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. ரத்த தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தைவிடக் குறைவுதான்.

* ரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா?

ரத்த தானம் செய்த பிறகு, ரத்த வங்கியிலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ உடனடியாகச் செல்லக்கூடாது. மாறாக, குளிர் பானம், பிஸ்கட் சாப்பிட்டு 15 நிமிஷம் ஓய்வு எடுக்க வேண்டும். அடுத்த வேளை உணவை நன்றாகச் சாப்பிடுவது நல்லது. உங்களது தினச வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம்.

இரத்தம் வெளியேறும் நேரம்

ஒரு மனிதனின் உடலில் மிக முக்கியமானது ரத்தம். ஒரு மனிதனுக்கு அப்படிப்பட்ட ரத்தம் உறையும் நேரம் என்பது மிகவும் முக்கியம். ஒருவருக்கு ஆழமான காயம் ஏற்படும்போது ரத்தம் வெளியேறும்.
இவ்வாறு வெளியேறும் ரத்தம் எவ்வளவு நேரத்தில் உறைகிறது என்பதை கணக்கிடுவதே ரத்தம் உறையும் நேரம் ஆகும். இதற்கு ஒரு சோதனையை செய்கின்றனர். விரல் நுனியை ஆல்கஹால் கொண்டு துடைத்து விட்டு சிறிது அழுத்தி தேய்கின்றனர். இந்த அழுத்தம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். பின்னர் சுத்தமான ஊசியை கொண்டு விரல் நுனியில் குத்துகின்றனர். அப்போது ரத்தம் வர ஆரம்பிக்கும். இந்த நேரத்தை குறித்து கொள்கின்றனர்.

பின்னர், "பிளாட்டிங்' பேப்பரை வைத்து ரத்தத்தை ஒத்தி எடுக்கின்றனர்.ரத்தம் வெளிவருவது நிற்கும் வரை இவ்வாறு தொடர்ந்து செய்கின்றனர். இதன்படி ரத்தம் நிற்கும் நேரத்தை கணக்கிடுகின்றனர்.



இதனையே ரத்தம் உறையும் நேரம் என்கின்றனர். இந்த நேரம் ஒரு நிமிடம் முதல் 3 நிமிடம் வரை இருக்கும்.


சராசரியாக காயங்கள் ஏற்பட்டால் ரத்தம் உறையும் நேரம் 6 முதல் 10 நிமிடங்களாக இருக்கும். சிலருக்கு ரத்தம் உறைய தாமதமாகலாம்.


இவர்களுக்கு, ரத்த பிளேட்லெட்டுகள், த்ராம் பேரசைட்ஸ் குறைபாடுகள் உள்ளன என அறியலாம். சிலர், "ஹீமோபிலியா' எனும் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் உறைய அதிக நேரமாகும். சிலருக்கு மணிக்கணக்கானால் கூட ரத்தம் உறையாது. இதனால் ரத்த இழப்பு அதிகமாகி உடல்நிலை பாதிக்கப்படுவதோடு, உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். இந்த நோய் மரபணு குறைபாட்டினால் வருவதாகும். பெரும்பாலும் இவை பாரம்பரிய நோயாக இருக்கும். சந்ததிகளையும் தாக்கும் அபாயம் உண்டு.

சிலந்தி




மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் நானோ. எதையும் மிகச்சிறிய அளவில் பயன்படுத்தி மிகப்பெரிய பயனைப் பெறுவது இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பாகும். பல்வேறு துறைகளில் நானோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டாலும், மருத்துவ உலகில் அதன் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது.

சவாலான ஆபரேஷன்களில் பயன்படும் புதுமையான நானோ ரோபோ தற்போது வடிவமைக்கப்பட்டு உள்ளது. சிலந்தி வடிவில் இந்த ரோபோ உள்ளது. மனிதனின் தலைமுடி தடிமனைவிட ஒரு லட்சம் மடங்கு சிறியது இந்த ரோபோ சிலந்தி.

கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சிலந்தி ரோபோவை உருவாக்கி உள்ளனர். இவ்வளவு சிறியதாக இருப்பதால் இதனை எளிதாக உடலுக்குள் செலுத்தி மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்த முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடலின் ஒவ்வொரு செல்லிலும் இரட்டைச் சுருள் ஏணி வடிவம் கொண்ட ஆர்.என்.ஏ. மூலக்கூறுகள் இருக்கிறது. நோய் ஏற்படும்போது ஆர்.என்.ஏ.க்களில் பாதிப்பு ஏற்படும். இந்த நானோ ரோபோவானது, ஆர்.என்.ஏ.வின் ஏணிச்சுருளில் இணைக்கப்பட்டு அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு டி.என்.ஏ. ஸ்பைடர் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.


நோயால் பிளவுபடும் டி.என்.ஏ. ஏணிச்சுருளில் இணைப்பு ஏற்படுத்தும் வேலையை இந்த ரோபோ செய்யும். ஆனால் இந்த ரோபோவால் ஏணிச்சுருளை துண்டு செய்ய முடியாது. அதே நேரத்தில் நோய்த் தொற்று செல்களை அழிக்க இதைப் பயன்படுத்த முடியும்.

சிலந்தி ரோபோவின் வேகம் மிகக் குறைவாகவே இருக்கிறது. இதன் வேகத்தை அதிகப்படுத்தவும், வேறுசில உத்தரவுகளை ஏற்று செயல்படும் வகையிலும் ரோபோவை தயாரிக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்த ரோபோவை நுண்ணிய கணினி பாகங்களை பொருத்துவதற்கும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் தகவல்!



ஸ்டெம்செல்கள்.



பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியில் இருந்து எடுக்கப்படும் ரத்தத்தில் இருந்து ஸ்டெம் செல்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த செல்கள் அதற்கென உள்ள வங்கிகளில் 0 டிகிரிக்கும் குறைவான தட்ப வெப்ப நிலையில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன.

சம்பந்தப்பட்ட நபருக்கு குணப்படுத்த முடியாத நோய் ஏற்படும்போது, இந்த “ஸ்டெம்” செல்கள் மூலம் குணப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையின் தற்போது மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களையும் “ஸ்டெம்” செல்கள் குணப்படுத் துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. லண்டனில் உள்ள பிரிஷ்டல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இது பற்றிய ஆய்வை மேற் கொண்டனர்.

“ஸ்டெம்” செல்களை இதய நோயாளியின் உடலில் செலுத்திய ஒரு நாளில் அவை ரத்தக்குழாயில் உள்ள கோளாறுகளை சரி செய்து குணப்படுத்துவதுதெரிய வந்துள்ளது.

மேலும் இருதய அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கும் இது பெருமளவில் உதவி கரமாக இருந்தது. இந்த ஆய்வின் மூலம் உலகில் உள்ள லட்சக்கணக்கான இருதய நோயாளிகள் குணமடைந்து நீண்ட நாள் வாழ்வார்கள்...


செயற்கைஇருதயம்




எல்லாவிதமான உறுப்புகளும், செயற்கை முறையில் தயாரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அதனை போல, இருதயத்துக்கு மாற்றாக, செயற்கை இருதயத்தை ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.இருதயம் முழுவதுமாக செயல் இழந்த நோயாளி களுக்கு, மாற்று இருதய அறுவை சிகிச்சை தரப் படுகிறது. மூளைச்சாவு நடைபெறும் சமயங்களில் வாரிசுகள், உறவினர்களின் அனுமதியுடன் இருதயம் அவரது உடலில் இருந்து அகற்றப்பட்டு, மாற்று இருதய அறுவை சிகிச்சை பெறும் நோயாளிக்கு பொருத்தப்படுகிறது.உலகம் முழுவதும் மாற்று இருதய அறுவை சிகிச்சைக்கு, காத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. இருதயம் பாதிக்கப் பட்ட நோயாளியின், இருதயத்தின் அருகில் 420 கிராம் எடையுள்ள செயற்கை இருதயம் ரத்த நாளத்தில் பொருத்தப்படுகிறது. அதன் மூலமாக உடல் முழுவதும் ரத்தம் எடுத்துச் செல்லப் படுகிறது. மாற்று இருதயம் கிடைக்கும் வரை, செயற்கை இருதயத்தைப் பொருத்தி, நோயாளியை மரணத்தில் இருந்து காப்பாற்றலாம்

வரம் தரும் நாக்கு


பற்களும் நாக்கும் சந்திக்கும் போது நலம் விசாரித்துக்கொண்டு பேசுவது வழகமாம்.. ஒரு நாள் நாக்கு பல்லைப் பார்த்தவுடன் பல்தம்பி பல்தம்பி நலமா? என்றதாம். நாக்குதான் அண்ணா. பல்தான் தம்பி.. ஏனென்றால் நாக்கு இந்த உலகத்துக்கு மும்பே வந்துவிடுகிறது. பல் பின்னாலேதான் வருகிறது.. உடனே பல் கூறியதாம் நீங்க நலமாய் இருந்தா நாங்க உங்க புண்ணியத்துல நலமாய் இருப்போம் என்றதாம்.. ஆம் ஏதாவது சொல்லி வம்பை விலைக்கு வாங்குவது இந்த நாக்கின் வேலை..... அதனால் உடைபட்டு உருவிழந்து போவது பல்தானே....பாவம் பல்..

"உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம் எது என்று கேட்டு ’நாக்குதான்’ என்று சிறு சொற்களால் இந்த உலகத்தையே அழிக்க வல்ல இந்த நாக்கை நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷணன் கூறுவார்..


சுவையாகச் சாப்பிடுபவரை நாக்கு மட்டும் ஒன்றரை கிலோ மீட்டர் நீளம் என்று கிண்டலாகக் கூறுவது உண்டு. இந்த நாக்குக்கு இந்த ஆறு சுவைகளின் ருசி போதாதாம்.. அறுசுவைகளை ருசிப்பது மட்டும் இல்லாமல் இப்போது எலும்பு இல்லாத இந்த நாக்கு தன்னுடைய நரம்புகளின் உதவியுடன் ஏழாவது சுவையையும் ருசிக்கிறது. சுவை மிக்க ருசியான உணவு கிடைக்காத போது நாக்கு செத்தே போயிடுச்சு என்றும் கூறுவதைக் கேட்டிருப்போம். இந்த நாக்கு செத்துப்போன கண்களுக்கு உயிர் கொடுக்கிறது என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். இதனால் தான் திருவள்ளுவர் “ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்” என்று கூறினார் போலும். இந்த அதிசயத்தை நம்பாதவர்கள் இதைப்படிங்க முதல்ல...

நாக்கு தன்னுடைய சுவையறி நரம்புகளால் காட்சிகளை அறிந்து, மூளை வழியாகக் கண்களுக்குத் தெரிவிக்கும் மற்றொரு அருமையான பணியைச் செய்கிறது. இதற்கு ஒரு புதிய மின்சாரக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனா, ஆஸ்திரேலியாவின் மெல்போன் நக்ரின் மருத்துவ விஞ்ஞானிகள். இந்த அசாதாரணத் தொழில் நுட்பக் க்ருவியின் பெயர் ப்ரைன் போர்ட் விஷன் டிவைஸ் (Brain port vision device).

இதன் அமைப்பு:
இது சுவையறி நரம்புகளின் உதவியால் (Sensory substitution) மின்னதிவுகள் மூலமாக் (Electrotactile stimulation) காண்பவற்றை மூளைக்கு அறிவித்து, அங்கு காட்சியாக மாற்றும் ஒரு கருவி. இது கைக்குள் அடங்கும் மிகச்சிறிய வடிவில் அமைந்துள்ளது. இதில் ஒரு கட்டுப்பாட்டுக் கோலும் (control unit), ஒரு கறுப்புக் கண்ணாடியும் (Sun Glass), அதனுடன் இணைக்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பும், அதன் முடிவில் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் லாலி பாப் (Lolli pop) வடிவிலான பிளாஸ்டிக் கைப்பிடியும் அமைந்துள்ளன. கறுப்புக் கண்ணாடியின் நடுவில் 25 செ.மீ. விட்டமுள்ள சிறிய டிஜிட்டல் கேமரா (Digital wdeo camera) பொருத்தப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு கைப்பேசி அளவுதான் இருக்கும்.


செயல் படும் முறை:
இதனைஅணியும் போது காட்சிகள் கேமராவில் படமாக்கப்பட்டு கையினால் இயக்கப்படும் கண்ட்ரோல் கோலுக்கு அனுப்பப் படுகிறது. இங்கு பதிவான காட்சிகள், மின்னதிவுகளாக மாற்றப்பட்டு நாவின் மீது வைக்கப்படும் லாலி பாப்பின் மூலம் நாக்கு நரம்புகளால் உணரப்படுகிறது. இந்த மெல்லிய உணர்வுகள் நரமபுக்ளின் வழியாக மூளைக்குச் சென்றடையும் போது காட்சிகளாகக் காண முடிகிறது. கையில் உள்ள கண்ட்ரோல் கோலின் உதவியால் காட்சிகளைத் தேவைக்கேற்பப் பெரிதாக்கிக் கொள்ளவும் (Zoom) முடியும்.

இதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் இக்கண்டுபிடிப்பு பார்வையற்றவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை அறியவும், பிறர் உதவியின்றி எங்கும் செல்லவும் பயன்படும் என்கின்றனர். மற்றொரு முக்கியமான பயன் இதன் உதவியால் துள்ளியமாகப் பார்க்கவும் முடியுமாம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இக்கருவையைச் சோதித்த போது இதைப் பயன் படுத்திய பார்வையற்ற ஒருவர் சுழன்று வந்த டென்னிஸ் பந்தை மிக எளிதாகப் பிடித்தாராம். அப்போது அவர் கணப்பொழுதில் நாக்கால் காட்சியை எளிதாக உணர்ந்ததாகக் கூறி வியந்தாராம்.

முதன் முதலில் இக்கருவியை வாங்கிப் பயன்படுத்திய பார்வையற்ற ஒருவர் எழுத்துக்களைப் பார்த்ததும் ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். ஆனால் இக்கருவியைப் பயன் படுத்திப் புத்தகம் படிப்பது அவ்வளவு நல்லது இல்லை என்கின்றனர்.


இந்தக் கருவியைப் பயன்படுத்தும் முறையை ஒருவர் கற்றுக்கொள்ள சுமார் இருபது மணி நேரம்தான் ஆகுமாம். கண் பார்வை இல்லாதவர்களுக்குக் கண் கண்ட இல்லை இல்லை நாக்கு கண்ட தெய்வம் இந்தக் கருவி. வாழ்க இதைக் கண்டறிந்த் விஞ்ஞானிகள்!!!.

30.5.10

தேசிய மலர்கள்.


இ‌ந்‌தியா‌வி‌ன் தே‌சிய மல‌ர் தாமரை.

‌பா‌கி‌ஸ்தா‌னி‌ன் தே‌சிய மல‌ர் ம‌ல்‌லிகை.

ஆஸ்திரேலியாவின் தே‌சிய மல‌ர் கொ‌ன்றை மல‌ர்க‌ள்

இ‌த்தா‌லி‌யி‌ன் தே‌சிய மல‌ர் வெ‌ள்ளை ‌லி‌ல்‌லி மலராகு‌ம்.

சீனாவின் தேசிய மலர் திராட்சை மலர்.

ஜப்பான் நாட்டின் தேசிய மலர் செ‌வ்வந்திப் பூ.

இங்கிலாந்து நாட்டின் தேசிய மலர் ரோஜா.

எகிப்து நாட்டின் தேசிய மலர் தாமரை.

பிரான்சின் தேசிய மலர் லில்லி மலர்.

வங்கதேசத்தின் தேசிய மலர் வெள்ளை அல்லி.

ரஷ‌்யா‌வி‌ன் தே‌சிய மல‌ர் வெ‌ள்ளை சாம‌‌ந்‌தி. (காமாமை‌ல்)

கனடா நா‌ட்டி‌ற்கு எ‌ன்று த‌னியாக தே‌சிய மல‌ர் இ‌ல்லை. மே‌ப்‌பி‌ள் இலையை, அரசு‌ச் ‌சி‌ன்னமாக‌க் கொ‌ண்டு‌ள்ளது.

மருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும்




இன்று நமது மருத்துவ கண்டுபிடிப்புக்கள் மிகவும் உச்ச நிலையில் காணப்பட்டாலும் அதற்கு நமது முன்னோடிகள் கண்டுபிடிப்புக்கள் தான் அடித்தளமானது. அவர்களின் சிலரது கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும்

மருத்துவத்துறையின் தந்தை- ஹிப்போகிரட்டீஸ்
நோய்கள் பக்டீரியாக்கள்,வைரஸ் மூலமே பரவுகிறது என்பதை முதன்முதலில் நிரூபித்தவர்- ஹிப்போகிரட்டீஸ்- கிரேக்கம்- கி. மு. 460 முதல் கி. மு. 370.

இரத்த சுற்றோட்டத்தை கண்டுபிடித்தவர் - வில்லியம் ஹார்வே- பிரித்தானியா-1628.

புற்று நோயைக் கண்டுபிடித்தவர் - ரொபர்ட வெய்ன பெரி- அமெரிக்கா-1682.

உடற்கூற்றியல் முறையினை அறிமுகப்படுத்தியவர் -அலபர் சர்வானஹாலர்-சுவிஸ்சிலாந்து-1757.

அம்மை குத்தும் முறையை அறிமுகப்படுத்தியவர் - எட்வேர்ட் nஐன்னர்-அமெரிக்கா -1796.

ஸ்ரெதஸ் கோப்பை கண்டுபிடித்தவர் - ரேனோலானக்-பிரான்ஸ்-1819.

மயக்க மருந்தைக் கண்டுபிடித்தவர் - Nஐம்ஸ் சிம்பஸன்-பிரித்தானியா-1847.

போலியோ முக்கூட்டு வக்ஸீ;சனைக் கண்டுபிடித்தவர் - அல்பெர்ட் சேபின்- அமெரிக்கா-1854.

வெறி நாய்க்கடி சிகிச்சையை அறிமுகப்படுத்தியவர் - லூயி பாஸ்டர்- பிரான்ஸ்-1860.

குஷ்டரேக கிருமியை கண்டுபிடித்தவர் - ஹான்ஸன்-நோர்வே-1873.

கோலரா காசநோய்க் கிருமியை கண்டுபிடித்தவர் - றொபர்ட்கோச்- Nஐர்மனி-1877.

இரத்தம் உறைதலைக் கண்டுபிடித்தவர் - பால்எர்ல்ச்-Nஐர்மனி-1884.

தொடுகை வில்லையைக் கண்டுபிடித்தவர்- அடோல்ஃப் ஃபிக்- ஐர்மனி-1887.

மனோதத்துவ சிகிச்சையை அறிமுகப்படுத்தியவர் - சிக்மண்ட்பிராய்ட்-அவுஸ்ரேலியா-1895.

புகைப்பட சிகிச்சையை அறிமுகப்படுத்தியவர் - சே பின்சன-டென்மார்க்-1903.

இதயமின் அலைப்படத்தைக் கண்டுபிடித்தவர் - என்தோவன்-நெதர்லாந்து-1906.

நீரிழிவு நோயைக் கண்டுபிடித்தவர் - பெண்டிக் கெஸட்- கனடா-1921.

திறந்த இருதய அறுவைச் சிகிச்சையை அறிமுகப்படுத்தியவர்- சோல்ரன் வில்லிஹெஸ்- அமெரிக்கா-1953.

பொதுஅறிவு துணுக்குகள்

கருப்புப் பெட்டி








விமான விபத்துக்கள் ந்டக்கும்போதெல்லாம் விபத்துக்கான காரணங்களையறிய விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணி ந்டக்கிறது என்ற செய்தி தவறாமல் இடம் பெறும். அது என்ன கருப்புப் பெட்டி ..? அதைப்பற்றிய சில விவரங்களைத் தெரிந்து கொள்வோமா...
அது கருப்புப் பெட்டி என்றழைக்கப்பட்டாலும் கருப்பு நிறத்தில் இருக்காது; எளிதில் அடையாளம் காணும் வகையில் ஆரஞ்சு அல்லது சிவப்பு வண்ணத்திலிருக்கும்.எஃகால் செய்யப்பட்ட மிகவும் உறுதியான பெட்டி இது; இதன் மீது பல அடுக்குகளாக எஃகுத் தகடுகள் சுற்றப்பட்டிருக்கும். இது எவ்வளவு கடுமையான விபத்திலும் சேதமடையாது; 2012 டிக்ரி ஃபாரன்ஹீட் வெப்பத்தை தாங்கும் அளவுக்கு உறுதியானது; 1100 டன் அளவுக்கு இரும்பு பாரத்தை இதன் மீது ஏற்றினாலும் இது ந்சுங்காது. கடலின் ஆழத்தில் வீழ்ந்தாலும் எவ்வித பாதிப்பிற்கும் உள்ளாகாது.இதனுள்ளிருக்கும் பேட்டரிகள் 6 ஆண்டுகள் வரை செயல்படும்.
இதனுள் 2 பிரிவுகள் இருக்கும். ஒன்று Flight data recorder எனப்படும்; விமானம் பறக்கும் உயரம், வேகம், நேரம் போன்ற விவரங்கள் இதில் பதிவாகும். மற்றொன்று Voice recorder எனப்படும்; இதில் விமானியின் அறையில் ந்டக்கும் உரையாடல்கள் மற்றும் அங்கு ஏற்படும் சப்தங்கள் இதில் பதிவாகும்.
இந்தப் பெட்டி விமானத்தின் வால் பகுதியில் இருக்கும். இதிலிருந்து பீப்.. பீப் ..என்ற ஒலி எப்போதும் வந்து கொண்டேயிருக்கும் ; விமான விபத்திற்குப் பிறகு இப்பெட்டியை தேடிக் கண்டுபிடிக்க இந்த ஒலி உதவுகிறது.....


வண்ணங்கள்


வண்ணங்கள் இல்லாத வாழ்க்கையை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது. உணவுக்கு எவ்வாறு உப்பு அவசியமோ, அதுபோல வாழ்க்கைக்கு வண்ணங்கள் அவசியம். வண்ணங்கள் நமக்கு சந்தோஷத்தையும், ஆனந்தத்தைம் தருகின்றன. அதனால் அனைவரும் வண்ணங்களை விரும்புகின்றனர்.

ஆடை மட்டுமின்றி உணவு, செல்போன்கள், காலணிகள், பைகள், கண்ணாடிகள், தலைமுடி என எல்லாவற்றிலும் வித்தியாசமான வண்ணங்களை எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர் இன்றைய இளையதலைமுறையினர். கருப்பு-வெள்ளையில் பாரப்பதற்கு போரடித்த புத்தகங்கள் கூட இன்றைக்கு பலவிதமான வண்ணங்களில் வெளிவந்து படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.

வண்ணங்களைச் சாதாரணமாக நினைத்து விடக் கூடாது. நாம் தேர்ந்தெடுக்கும் வண்ணங்களை பொறுத்து நம்முடைய மனநிலை அமைவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, நீங்கள் அடர்த்தியான வண்ணங்களில் உடை அணியும்போது, சந்தோஷமாக உணர்வீர்கள்; ஒருவிதமான தன்னம்பிக்கை தானாகவே உங்கள் உள்ளத்தில் உருவாகி விடும். அதேநேரம் அடர்த்தி குறைந்த வண்ணங்களால் ஆன உடைகளை நீங்கள் அணியும்போது சோம்பல் உணர்வு தோன்றும்.

இந்தியர்களை பொறுத்த வரையில், அவர்களின் மேனி நிறங்களை வைத்து நன்றாக வகைபடுத்தலாம்.

வெள்ளை- இவர்களுக்கு அடர்த்தியான வண்ணங்கள் பொருத்தமாக இருக்கும். சிவப்பு, கடல் ஊதா, கறுப்பு போன்ற வண்ணங்கள் ஏற்றவை.

மாநிறம்- மெஜந்தா, ஆரஞ்சு போன்ற நடுத்தரமான வண்ணங்கள் சிறந்தவை.

கறுப்பு- மெருன், மயில் ஊதா போன்ற வண்ணங்கள் நன்றாக இருக்கும்.

இதைத் தவிர்த்து கறுப்பு-வெள்ளை வண்ணங்கள் அனைவருக்கும் ஏற்றவை. தனக்கு பொருத்தமில்லாத வண்ணங்களின் மேல் ஆசை கொண்டவர்கள், அணிகலன்கள், பர்ஸ், கைபை, ஸ்டோல், செல்போன், கண்ணாடி, காலணி, கைக்குட்டை போன்றவற்றை தான் விரும்பிய வண்ணங்களில் வாங்கி பயன்படுத்தி மகிழ்கிறார்கள்.

மெஜந்தா, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் போன்றவற்றைக் கதகதபான வண்ணங்களாகக் குறிப்பிடுகின்றனர். இந்த வண்ணங்களால் ஆன உடைகளை அணியும்போது வெப்பநிலை சமச்சீராக வைக்கப்பட்டு உடல் கதகதப்பாக இருக்கும்.வெளிர் நீலம், பச்சை, பர்பிள் போன்றவற்றை குளிரான வண்ணங்கள் எனலாம். இந்த வண்ணங்களால் ஆன உடைகளை அணியும்போது மனம் ஒருவிதமான அமைதி நிலையில் காணப்படுகிறது.

அடர்த்தியான வண்ணங்களை மாலை மற்றும் இரவு நேரங்களில் அணிந்து கொள்ளலாம். அப்போதுதான் அவை உயர்ந்த சிறப்பான தோற்றத்தைத் தரும். அதேபோல் அடர்த்தி குறைந்த வண்ணங்களை பகல் நேரங்களில் அணிய வேண்டும். அப்போதுதான் சூரிய வெளிச்சத்திலிருந்து பாதுகாத்து, குளிர்ச்சியாக இருபது போல் உணர வைக்கும்.

அனைத்து வண்ணங்களுடனும் பொருந்திபோகும் தன்மை வெள்ளைக்கு உண்டு. அதுபோல எல்லா விதமான ஆடைகளையும் வெள்ளை வண்ணத்தில் அணியலாம். பொதுவாக வெள்ளை வண்ண உடைகளை அணிந்தாலே ஒரு உயர்ந்த தோற்றத்தைக் கொடுக்கும். அதனால்தான் மிகபெரிய பதவிகளில் இருப்பவர்கள் கூட எந்த நேரமும் வெள்ளை உடைகளிலேயே காட்சி தருகிறார்கள்.

அலைபாயாமல் மனதை அடக்கி ஒருநிலைபடுத்தும் தன்மை கொண்டதால்தான், மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட அனைவரும் வெள்ளை வண்ண உடைகளையே அணிகின்றனர். இது விரைவிலேயே அழுக்கானாலும், பலர் இந்த வண்ணத்தை விரும்பி அணிகின்றனர்.

அணிந்து கொள்பவருக்கு சிறப்பான ஸ்டைலைத் தருவதில் கறுப்பு வண்ணத்துக்கு பெரும்பங்குஉண்டு. பெரும்பாலும் பார்ட்டிகளுக்கு கறுப்பு வண்ண உடைகள் ஏற்றவை. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் பார்ட்டி, விழாக்கள், திருமணம் ஆகிய எல்லாவற்றிலும் கறுப்பு வண்ண உடைகள் முதலிடம் பிடிக்கின்றன. இந்தியாவில் சோக வண்ணமாக இதைக் கருதுவதால் பெரும்பாலும் சுப நிகழ்ச்சிகளுக்கு கறுப்பு வண்ண உடைகளை அணிவதில்லை.

சிவப்பை `பேஷன் கலர்’ என்று குறிப்பிடுகின்றனர். பெரும்பாலான பேஷன் டிசைனர்கள் சிவப்பு வண்ணத்தை பயன்படுத்துகின்றனர். காதலர்களுக்கு மிகவும் பிடித்த வண்ணங்களுள் சிவப்பு முதலிடம் பெறுகிறது. பெண்களுக்கு மிகவும் பிடித்தது பிங்க். இந்த வண்ண உடைகளை அணிம்போது மென்மை, ரொமான்ஸ் போன்ற உணர்வுகள் தோன்றுகின்றன. தற்போது ஆண்களும் விரும்பும் வண்ணமாக இது உள்ளது. கடல், வானம் என ஊதா வண்ணம் எல்லா இடங்களிலும் விரவிக் கிடக்கிறது. இந்தியில் இதை `நிலா’ என்று அழைக்கிறார்கள்.

பரந்துபட்ட இயற்கையில் பச்சை வணமே பெரும்பங்கு வகிக்கிறது. அடர்த்தியானது, அடர்த்தி குறைந்தது என இரண்டு வகைகள் உண்டு. இன்டீரியரை இந்த வண்ணத்தில் அலங்கரித்தால் நன்றாக இருக்கும். அடர்த்தியாகக் காணப்படும் மஞ்சள் வண்ணம் பார்வையை கூசச் செய்யும். பிரவுன் `பூமியின் வண்ணம்’ எனப்படுகிறது. பெரும்பாலும் ஆண்களே இந்த வண்ணத்தை விரும்பி அணிகின்றனர்.

கறுப்பு, க்ரே, வெள்ளை, கடல் முலம் போன்ற வண்ணங்கள் ஆண்களுக்கு மிகவும் பிடித்தவை. வெள்ளை சட்டைக்கு அடர்த்தியான வண்ணங்களாலான கோட் பொருத்தமாக இருக்கும். அடர்த்தியான வண்ணங்கள் அமைந்த சட்டைக்கு பிளாக் கோட் நன்றாக இருக்கும்.

அலுவலகம் செல்லும்போது வெள்ளை, ஊதா போன்ற வண்ணங்களால் ஆன உடைகளே சிறந்தது. அடர்த்தியான வண்ணங்கள் மனதை திசைதிருப்பி விடும். எனவே, அடர்த்தி குறைந்த வண்ணங்களை பயன்படுத்த வேண்டும். அடர்த்தியான வண்ணங்களை விரும்புபவர்கள் குடை, கைக்குட்டை போன்றவற்றை அடர்த்தியான வண்ணங்களில் வாங்கி பயன்படுத்தலாம்.

சிவப்பு, வயலட், பிங்க், நீலம் என அடர்த்தியான வண்ணங்களையே குழந்தைகள் விரும்புகின்றனர். அவர்களின் அறைச்சுவர்களை பல்வேறு வண்ணங்களால் அலங்கரிக்கலாம். இதனால் வண்ணங்களை பற்றிய புரிதல் அவர்களுக்கு ஏற்படும். விலங்குகளின் படங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை விதவிதமான வண்ணங்களில் எழுதி வைக்கும்போது, குழந்தைகள் வண்ணங்களால் ஈர்க்கபட்டு அவற்றை கற்றுக் கொள்கிறார்கள்.

வெள்ளை, கறுப்பு, சிவப்பு, கடல் ஊதா, பிங்க், சில்வர், காப்பர் போன்ற வண்ணங்கள் வசந்த காலத்திற்கு ஏற்றவை. ரோஸ் பிங்க், கடல் ஊதா, ரோஸ் பிரவுன், வெளிர் ஊதா போன்றவை கோடை காலத்திற்கு உகந்ததாக இருக்கும். கறுப்பு, ஆரஞ்சு போன்ற வண்ணங்களை இந்தக் காலத்தில் பயன்படுத்தக் கூடாது. ஆரஞ்சு, கோல்டு, பிரவுன் போன்ற வண்ணங்கள் இலையுதிர் காலத்திற்குச் சிறந்தவை. ஊதா வண்ணத்தை இந்தக் காலத்தில் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. கோல்டன் மஞ்சள், கோல்டன் பிரவுன், வெளிர் ஆரஞ்சு போன்றவை குளிர்காலத்திற்கு ஏற்றதாக இருக்கும். அடர்த்தியான வண்ணங்களை இந்தக் காலத்தில் பயன்படுத்தக் கூடாது....


மேதைகளின் அப்பாக்கள்


உலக அளவில் புகழ்பெற்று அவர்கள் இறந்தும், இறவாப் புகழுடன் வரலாற்றில் இடம்பிடித்துள்ள எத்தனையோ பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள் சாதாரண மனிதர்களாகத்தான் இருந்துள்ளனர்.

இதற்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகள் உள்ளன.

அதில்...வில்லியம் ஷேக்ஸ்பியர் எனும் உலக இலக்கிய மேதையின் அப்பா குதிரை லாயத்தினை பராமரித்து வருபவராக இருந்துள்ளார்.

தாமஸ் ஆல்வா எடிசனின் தந்தையோ படகு செய்து வாழ்க்கை நடத்திய ஏழையாக இருந்துள்ளார்.

பெஞ்சமின் பிராங்ளின் தந்தை மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரியாக இருந்துள்ளார்.

பெரும் ஆட்சியாளராக இருந்த ஹிட்லரின் தந்தை சாதாரண கட்டிட கூலித் தொழிலாளி.

ஆபிரகாம் லிங்கத்தின் அப்பாவோ சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டனின் அப்பா சாதாரண வியாபாரிதான்.

ஆங்கில அகராசியின் ஆசிரியரான சாமுவேல் ஜான்சனின் தந்தை மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்த புத்தக வியாபா‌ரியாவார்.

மொழிகளைத் தாண்டி உலக மக்களையே சிரிப்பில் ஆழ்த்திய சார்லி சாப்ளின் தந்தை வீட்டு வேலைக்காரராக இருந்துள்ளார்.

எனவே நாம் இருக்கும் இடம் வேண்டுமானால் கீழே இருக்கலாம். ஆனால் இருக்கப் போகும் இடம் மிக உயர்ந்ததாக இருக்க நாம் தான் முயல வேண்டும்.

பெற்றவர்களின் வழிகாட்டுதல் எத்தனை பேருக்குக் கிடைக்கும். மேற்கண்டவர்களுக்கெல்லாம் அவர்களது அப்பாக்களின் வழிகாட்டுதல் இருந்திருக்குமா என்ன? அவர்களாகவே அவர்களுக்கென ஒரு பாதையை தேர்ந்தெடுத்து அதில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளனர்..